News January 16, 2026

தருமபுரி: ஒரே நாளில் ஒரு கோடிக்கு விற்பனை!

image

தருமபுரி, பொம்மிடி ஊராட்சி வடசந்தையூரில் நேற்று (ஜன.15) ஆட்டுச்சந்தை நடந்தது. காணும் பொங்கலையொட்டி ஏராளமான ஆடுகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், 10 கிலோ கொண்ட ஆடு ரூ.8,500 முதல், 15,000 வரையும், ஆடு, ஆட்டு கிடா, ரூ.13,000 முதல் ரூ.25,000 வரை விற்பனையானது. இந்த சந்தையில் 1,000-க்கும் மேற்பட்ட ஆடுகள், ஒரு கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News February 7, 2026

தர்மபுரியில் இன்று மின் தடை!

image

சோகத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று(பிப்.7) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக வெண்ணாம்பட்டி குடியிருப்பு, குமாரசாமிப்பேட்டை, ரெட்டிஅள்ளி, பென்னாகரம் ரோடு, மாந்தோப்பு, இ.ஜெட்டி அள்ளி, அப்பாவு நகர், ரெயில் நிலையம், ஆயுதப்படை குடி யிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 7, 2026

தர்மபுரியில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை!

image

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி கடந்த பிப்.2ஆம் தேதி வாணியாறு அணைப் பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர், மூதாட்டியை பைக்கில் அழைத்துச் சென்று, அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதியில் வைத்து பாலியல் தொந்தரவு தந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 7, 2026

தர்மபுரியில் துடிதுடித்து பலி!

image

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த வாலிபர் சோகிப்(24). இவருடைய உறவினர் அபீஸ் உல்லா(38). இவர்கல் இருவரும் தேசிய நெடுஞ்சாலையில் முத்துப்பட்டி பிரிவு சாலை அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். தொடர்ந்து, அதே வழியில் வந்த லாரி சோகிப் மீது ஏறியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!