News March 31, 2024
சென்னை: வெளியே செல்லும் முன் கவனம்..எச்சரிக்கை

31.03.2024 முதல் 04.04.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News February 17, 2026
சென்னை; பெண் துடிதுடித்து பலி!

மணலி அடுத்த எர்ணாவூர் பகுதியைச் சேர்ந்தவர் லவல்(55). இவரது மனைவி ரெஜியா(50). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் வீடு மாற பொருட்களை ஏற்றிக் கொண்டு ஆட்டோவில் பட்டாபிராம் சென்றனர். பின்னர், நேற்று(பிப்.16) மாலை மீண்டும் எர்ணாவூர் திரும்பிய போது மீஞ்சூர் சாலையில் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் ஆட்டோ மோதி விபத்திற்குள்ளானது. இட்தில் ரெஜியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
News February 17, 2026
சென்னை: ஆபாச வீடியோ எடுத்த வாலிபர்!

சேத்துப்பட்டில் உள்ள பிரபல திருமண மண்டபத்தில் கடந்த பிப்.14ஆம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சியில், 50 வயது மிக்க பெண் ஒருவர் கழிவறையில் ஆடைகளை சரி செய்துள்ளார். அப்போது, அதை கழிவறை ஜன்னல் வழியாக ஒருவர் செல்போனில் படம் பிடித்தார். அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் பெயர் பிரபு(29) என்பதும், தொடர்ந்து இதே வேலையை பொழுதுபோக்காக செய்து வருவதும் தெரிய வந்ததும் போலீசார் கைது செய்தனர்.
News February 17, 2026
சென்னை: தம்பதி கொடூர கொலை!

சென்னையை அடுத்த கானத்தூரைச் சேர்ந்த சுசில் ராஜ்(32) – கிரிஜா(29) தம்பதி. இவர்களது எதிர் வீட்டில் வசித்து வந்தனர் பார்த்திபன்(42) – ஜமுனா(35) தம்பதி. இந்நிலையில், சுசில்ராஜுடன் தனது மனைவிக்கு தகாத உறவு இருப்பதாகக் கூறி அடிக்கடி பார்த்திபன் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், நேற்று(பிப்.16) இரவு மது போதையில் இருந்த பார்த்திபன் சுசில்ராஜ் – கிரிஜாவை கத்தியால் குத்தி கொலை செய்தார்.


