News January 16, 2026
சென்னையில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

சென்னை மாவட்டம் முழுவதும் “Knights on Night Rounds” என்ற திட்டத்தின் கீழ் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.
Similar News
News February 21, 2026
சென்னையில் கொடூரம்; ஓடும் மெட்ரோவில் கத்திய பெண்!

சென்னை திருவொற்றியூரில் இருந்து அண்ணா சாலை செல்ல 20வயது இளம்பெண் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அப்போது பீகாரை சேர்ந்த அனில் சவுத்ரி என்பவர் அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டுள்ளார். தகவலறிந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் அவரை கைத செய்து விசாரித்து வருகின்றனர். ஓடும் மெட்ரோவில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News February 21, 2026
சென்னை: வீட்டின் கழிவறையில் எட்டி பார்த்த பாம்பு

மதுரவாயல், தேவி கருமாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பத்மநாபன். நேற்று இவரது வீட்டின் கழிவறையில் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி வேளச்சேரி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், கழிவறைக்குள் பதுங்கி இருந்த சுமார் 4 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை நீண்டநேரம் போராடி பிடித்து கொண்டு சென்றனர்.
News February 21, 2026
சென்னை: லோக்கல் ரயிலில் செல்வோர் கவனத்திற்கு!

எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவைகளில் சில மாற்றங்களை செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதிய கால அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த தற்காலிக புதிய அட்டவணை ஏப்ரல்.5ஆம் தேதி வரை பின்பற்றப்படும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து விழிப்புடன் இருக்க வைங்க.


