News February 20, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (பிப்.19) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 20, 2026
செங்கல்பட்டு: மின்சார ரயில்கள் மாற்றம்!

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று (பிப்.20) முதல் ஏப்.5ஆம் தேதி வரை சில புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
காலை 05.45 மணி முதல் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படும் சில ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுவதுடன், சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 20, 2026
வண்டலூர் அருகே அதிரடி கைது!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்(22). இவர், மறைமலைநகரில் தங்கி, கேளம்பாக்கம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன் தினம் பைக்கை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டுச் சென்றார். பின்னர், காலையில் எழுந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்ததில் ஹரி(20) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
News February 20, 2026
செங்கல்பட்டில் பயங்கர விபத்து!

பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மதுராந்தகத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது கார், முன்னாள் சென்ற அரசு பேருந்தை முந்த முயன்ற போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அடுத்தடுத்த 2 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானன. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


