News January 29, 2026

செங்கல்பட்டு: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

செங்கல்பட்டு மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <>Aadhaar மொபைல் ஆப்பை<<>> அறிமுகம் செய்துள்ளது. இதில் நீங்கள் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடு செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 4, 2026

செங்கல்பட்டில் அதிரடி மாற்றம்

image

செங்கல்பட்டு மாவட்ட, வருவாய் அலகில் செங்கல்பட்டு, வண்டலூர், திருப்போரூர், செய்யூர் உள்ளிட இடங்களில் பணியாற்றி வந்த 6 துணை வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சினேகா உத்தரவிட்டுள்ளார். அதன்படி கிருஷ்ணவேணி, முத்து, வெங்கடேசன், தேவன், ரேணுகாதேவி மற்றும் சரவணன் ஆகிய வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News February 4, 2026

செங்கல்பட்டு: காற்றில் பறக்கவிட ஆட்சியர் உத்தரவு

image

செங்கல்பட்டு அண்ணா நகரில் உள்ள டாஸ்மார்க் மதுபான கடையை இடமாற்றம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டும் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். இப்பகுதியில் இரண்டு ரேஷன் கடைகள் உள்ள நிலையில் பெண்கள் அதிக அளவில் ரேஷன் கடைக்கு வருகின்றனர். இவர்களிடம் குடிமகன்கள் வரம்பு மீறி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கலெக்டர் சினேகா இந்த டாஸ்மார்க் கடையை இடமாற்றம் செய்யும்படி உத்தரவிட்டார். ஆனாலும் இடமாற்றம் செய்யவில்லை.

News February 4, 2026

செங்கல்பட்டு: ஒரே நாளில் தாய், மகன் உயிரிழந்த கொடூரம்

image

மதுராந்தகம் அருகே சோத்துப்பாக்கத்தில் மகன் உயிரிழந்த தகவல் அறிந்து, செய்வதறியாது கதறி அழுது கொண்டே, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை மூதாட்டி அலமேலு(70) கடக்க முயன்றரர். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அலமேலுவின் மகன் மணி(48). கடந்து சிலநாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!