News July 24, 2024

சீர்மரபினர் வீடு கட்ட நிதி உதவி

image

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு ‘சீட்’ திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வீட்டுமனைப்பட்டா மற்றும் வீடுகள் கட்ட நிதியுதவி ஆகிய திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ளவர்கள் அரசின் இணையதளமான www.dwbdnc.dosje.gov.in ” என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 8, 2026

நிபந்தனைகளுடன் விஜய் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி

image

கடலூர் மஞ்சைநகர் மைதானத்தில் தவெக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதனை முன்னிட்டு காவல்துறையினர் நிபந்தனைகளை விதித்துள்ளனர். அதில், காலை 10 மணிக்கு தொடங்குய பிரச்சாரத்தை 1 மணிக்குள்ளாக முடிக்க வேண்டும். பிரச்சார வாகனத்தை பின்தொடரவோ அதன்மீது ஏறுவது கூடாது. குழந்தைகள் கர்ப்பிணிகள் வருவதை தவிர்க்க வேண்டும். குடிநீர், மருத்துவம் ஆம்புலன்ஸ் போன்றவை இருக்க வேண்டுமென தெரிவித்தனர்.

News April 8, 2026

அண்ணாமலை ப.கழக மாணவர் சேர்க்கை தேதி நீடிப்பு

image

அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேல் நேற்று அறிக்கை வெளியிட்டார். அதில், அண்ணாமலை பல்கலைக்கழக துறையூர் இணையவழி கல்வி மையத்தில், இந்த ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை வரும் ஏப்.10ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதில், பட்டய படிப்பு, சான்றிதழ் படிப்பு, இசை மற்றும் நாட்டிய படிப்புக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிதுள்ளார். மேலும் விவரங்களுக்கு<> www.audde.in<<>> அனுகலாம்.!

News April 8, 2026

கடலூர்: தேர்தல் புறக்கணிப்பதாக கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

image

விருதாச்சலம் அடுத்த புது கூரைப்பேட்டை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் பட்டியல் மக்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், அவ்விடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் மனு அளித்த நிலையில், இதுவரை எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை என நேற்று பொதுமக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக கூறிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!