News March 19, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் நேற்று (18.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News April 5, 2026
கோவை: 10th, 12th, ITI போதும்.. ரூ.81,000 வரை சம்பளம்

1) பணி : ஹெட் கான்ஸ்டபிள்
2) மொத்தம் : 233 பணியிடங்கள்
3) 10/12/ டிப்ளமோ/ ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
4) வயது 18 முதல் 27 வரை இருக்க வேண்டும்.
5) சம்பளம் ரூ.25,000 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும்.
6) விண்ணப்பிக்க <
7) கடைசி தேதி : ஏப்ரல் 20, 2026. (SHARE)
News April 5, 2026
மேட்டுப்பாளையத்தில் இளைஞர் தற்கொலை

மேட்டுப்பாளையம் காட்டூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் கார்த்திக்(37). இவர் பிளக்ஸ் பிரிண்டிங் ஆர்டர் எடுத்து செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாகவே திருமணமாகாத மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இவர் நெல்லித்துறை பாலத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News April 5, 2026
ஓய்வுபெற்ற தாசில்தாரிடம் ரூ.45.5 லட்சம் டிஜிட்டல் மோசடி!

கோவை சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தாசில்தார் குணசேகரனை, லக்னோ பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் எனக்கூறி மர்ம நபர் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டார். “உங்கள் ஆதார் மூலம் தீவிரவாதிகளுக்குப் பணம் அனுப்பப்பட்டுள்ளது” என மிரட்டி, அவரிடமிருந்து ரூ.45.50 லட்சத்தை பறித்துள்ளார். பின் புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரைத் தீவிரமாகத் தற்போது தேடி வருகின்றனர்.


