News April 22, 2024
கும்பகோணம்: 2 நாளில் 8 ஆடுகள் உயிரிழப்பு!

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். நேற்று(ஏப்.21) மதியம் இவருக்கு சொந்தமான 4 ஆடுகள் வயிறு வீங்கி, மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதேபோல கடந்த 2 நாட்களுக்கு முன்பு 4 ஆடுகள் மர்மமான முறையில் இறந்துள்ளது. இது குறித்து பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், ஆடுகள் இறந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 1, 2026
தஞ்சை மக்களே.. இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்
1. மொத்த பரப்பளவு: 3,411 ச.கி.மீ.
2. மொத்த மக்கள்தொகை: 24,05,890 (2011)
3. சட்டமன்ற தொகுதிகள்: 8
4. நாடாளுமன்ற தொகுதிகள்: 2
5. வட்டங்கள்: 10
6. பேரூராட்சிகள்: 20
7. நகராட்சிகள்: 2
8. மாநகராட்சிகள்: 2
9. ஊராட்சி ஒன்றியங்கள்: 14
10. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News February 1, 2026
தஞ்சை: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

தஞ்சை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News February 1, 2026
தஞ்சை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தஞ்சை மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் நாளை (பிப்.02) மற்றும் நாளை மறுநாள் (பிப்.03) ஆகிய 2 நாட்கள் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.


