News February 5, 2026
குமரி: பைக் விபத்தில் 2 பேர் சம்பவ இடத்தில் பலி.!

இறச்சகுளம் பகுதியில் நேற்று இரவு இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் வாகனத்தில் சென்ற சுஜின் மற்றும் கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களது சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News February 9, 2026
குமரி: Certificate திரும்ப பெறுவது இனி சுலபம்!

கன்னியாகுமரி மக்களே; உங்களது 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது, <
News February 9, 2026
குமரி: இளம்பெண்ணை வெட்டிக் கொன்ற சித்தப்பா.!

தலக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுபிதா (28). இவர் கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். அப்போது அவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், சுபிதா நேற்று அவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த அவரது சித்தப்பா ராஜேஷ் சுபிதாவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் சுபிதா சம்பவ இடத்திலேயே இறந்தார். இரணியல் போலீசார் வழக்கு பதிந்து ராஜேஷை கைது செய்தனர்.
News February 9, 2026
குமரி: நண்பர் இறந்த துக்கத்தில் இளைஞர் தற்கொலை.!

செண்பகராமன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (20). இவர் ஐடிஐ படித்து வந்தார். இவர் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். ஆரல்வாய்மொழி போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், வசந்தகுமாரின் நண்பர் முத்து கிஷோர் கடந்த 3ம் தேதி தற்கொலை செய்த நிலையில், மன வேதனையில் வசந்தகுமாரும் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.


