News January 21, 2026
கீழ்ப்பாக்கம் GH-இல் நோயாளி தற்கொலை!

சென்னை கீழ்ப்பாக்கம் மருந்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அருணாச்சல மாநிலத்தை சேர்ந்த இலியாகோ (22) என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று ஆறாவது தளத்தில் ரத்த பரிசோதனை செய்ய சென்ற போது, அவருக்கு ரத்த வாந்தி ஏற்படுள்ளது. இதில் மனமுடைந்த அவர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 1, 2026
சென்னை: துரத்தி துரத்தி கடித்து குதறிய நாய்

சென்னை அம்பத்தூர் திருவேங்கட நகர் பகுதியைச் சேர்ந்த அன்பரசன் (60) என்பவர் வீட்டருகே உள்ள பூங்கா–வில் நடைபயிற்சி சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது தெருநாய் ஒன்று திடீரென துரத்தி துரத்தி பாய்ந்து அவரது கையை கடித்துக் குதறியது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாயை விரட்டி மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் அது வளர்ப்பு நாய் என தெரியவந்தது.
News February 1, 2026
எழும்பூர்: சாலை விபத்தில் கல்லூரி உதவி பேராசிரியர் பலி

ஆவடியைச் சேர்ந்தவர் தனசேகர் (34). கல்லூரி உதவி பேராசிரியர். இவர் நேற்று மாலை சக ஊழியர் ஒருவருடன் பைக்கில் பெரியமேடு கவின் கலை கல்லுாரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மாநகர பேருந்து இவர் சென்ற பைக்கின் மீது மோதியது. இதில் கீழே விழுந்த தனசேகர், பலத்த காயமடைந்தார். இந்நிலையில், GH – இல் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அண்ணா சதுக்க போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 1, 2026
எழும்பூர்: சாலை விபத்தில் கல்லூரி உதவி பேராசிரியர் பலி

ஆவடியைச் சேர்ந்தவர் தனசேகர் (34). கல்லூரி உதவி பேராசிரியர். இவர் நேற்று மாலை சக ஊழியர் ஒருவருடன் பைக்கில் பெரியமேடு கவின் கலை கல்லுாரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மாநகர பேருந்து இவர் சென்ற பைக்கின் மீது மோதியது. இதில் கீழே விழுந்த தனசேகர், பலத்த காயமடைந்தார். இந்நிலையில், GH – இல் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அண்ணா சதுக்க போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.


