News February 4, 2026

கிருஷ்ணகிரி: பழைய காதலால் பறிபோன உயிர்!

image

பீகாரை சேர்ந்த சனில்குமார் (20) நல்லூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் விவகாரம் மனைவிக்கு தெரிய வந்ததால் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த இவர் கடந்த 2-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 8, 2026

கிருஷ்ணகிரி: தூக்கில் தொங்கிய பள்ளி மாணவி!

image

மகராஜகடை அடுத்த சிந்தகம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரின் மகள் கீர்த்தனா, 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் நண்பர் கீர்த்தனாவின் செல்போனில் புகைபடம் அனுப்பியுள்ளார். இதனை கண்ட அவரது பெற்றோர் கீர்த்தனாவை திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த கீர்த்தனா வீட்டில் நேற்று (பிப்.7) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 8, 2026

கிருஷ்ணகிரி: தீயில் விழுந்து துடிதுடித்து பலி!

image

குருபரப்பள்ளி அடுத்த ஜிங்களூரை சேர்ந்தவர் ஷேக் பையாஸ். இவர் தொடர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று (பிப்.6) வீட்டில் சமையல் செய்யும் போது திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அருகில் இருந்த தீயில் விழுந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (பிப்.7) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 8, 2026

கிருஷ்ணகிரி: மகனை சுட்ட கொடூர தந்தை!

image

தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி வீரணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன். இவரது மகன் மாணிக்கம். நேற்று (பிப்.7) மதுபோதையில் இருந்த மாதப்பணுக்குமவரது மகனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மாதப்பன் தனது மகனை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் மாணிக்கம் காயமடைந்தார். இதையடுத்து உரிமமின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக அஞ்செட்டி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!