News November 23, 2025
காலையில் மாரடைப்பு.. காரணம் இதுதான்!

காலையில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், ஏனெனில் உடலில் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகரிப்பது காரணமாகிறது. இது உடலில் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் வெளியாவதால் ஏற்படுகிறது. இரவில் ஏற்படும் நீரிழப்பும் மாரடைப்பை தூண்டுவதற்கு ஒரு காரணமாக அமைகின்றன. முறையான தூக்கம், உடற்பயிற்சியால் இந்த ஆபத்தை தடுக்க முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர். உஷாரா இருங்க..!
Similar News
News February 11, 2026
ஜெயலலிதா சொன்னதால் ’எடப்பாடி’ பெயர் வந்தது: EPS

ஜெயலலிதா எப்போதுமே சிறப்பாக செயல்பட வேண்டும் என எண்ணக்கூடியவர் என அவர் மீதான நினைவலைகளை <<19113803>>EPS பகிர்ந்துள்ளார்<<>>. தனியார் ஊடகத்தில் பேசிய அவர், தான் கட்சியில் சிறப்பாக செயல்பட்டதால் அமைப்பு செயலாளர், அமைச்சர் என பல பதவிகளை ஜெ., வழங்கினார் என்று தெரிவித்துள்ளார். பெயர் முன் ஊரின் பெயரை அடையாளமாக வைக்கும்படி ஜெயலலிதா சொன்னதாலே தனது பெயரை ’எடப்பாடி பழனிசாமி’ என மாற்றிக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
News February 11, 2026
சிவராத்திரி, வார விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பஸ்கள்!

மகா சிவராத்திரி, வார விடுமுறையையொட்டி மக்கள் நெரிசலின்றி பயணிக்க, நாளை முதல் <<19111685>>சிறப்பு பஸ்களை<<>> அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 1,360 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. வெள்ளியன்று 6,901 பேர், சனியன்று 5,364 பேர், ஞாயிறன்று 10,128 பேர் அரசு பஸ்களில் ஏற்கெனவே டிக்கெட் புக் செய்துள்ளனர். நீங்களும் <
News February 11, 2026
அதிமுகவுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிமுக கூட்டணிக்கு பல சிறிய கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்த பட்டியலில் மருது சேனை சங்கம் புதிதாக இணைந்துள்ளது. சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில், EPS-ஐ அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன் நேரில் சந்தித்தார். நிர்வாகிகளுடன் சென்ற அவருக்கு, EPS உற்சாக வரவேற்பளித்தார். தொடர்ந்து, சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிப்பதற்கான கடிதத்தை அவர்கள் வழங்கினர்.


