News November 14, 2025
கவின் கொலை வழக்கு: சுர்ஜித் தாய்க்கு பிடிவாரண்ட்

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரியை கைது செய்ய மாவட்ட கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கிருஷ்ணகுமாரி, கோர்ட் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே சுர்ஜித், அவரது தந்தை மற்றும் உறவினர் சரவணன் ஆகியோர் சிறையில் உள்ளனர்.
Similar News
News March 10, 2026
விஜய் நாளைக்கு டெல்லி செல்ல வேண்டாம்!

டெல்லி CBI அலுவலகத்தில் நாளை ஆஜராவதில் இருந்து விஜய்க்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கரூர் துயர வழக்கு விசாரணை தொடர்பாக நாளை ஆஜராகுமாறு இன்று அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால், தேர்தல் பணி இருப்பதால் விலக்கு அளிக்குமாறு விஜய் தரப்பில் கோரப்பட்டிருந்தது. இதனை ஏற்று விஜய் நாளை CBI அலுவலகம் செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
News March 10, 2026
விஜய் NDA கூட்டணியில் சேரலாம்: இயக்குநர் மோகன் ஜி

NDA கூட்டணியில் விஜய்யை இணைக்க பவன் கல்யாண் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. இதை சுட்டிக்காட்டி, NDA கூட்டணியில் விஜய் இணைந்து செயல்படுவதே புத்திசாலித்தனம் என இயக்குநர் மோகன் ஜி பதிவிட்டுள்ளார். வெறும் 6,7 தெரிந்த முகங்களை வைத்து தேர்தலில் போட்டியிட்டு, வாக்குகளை பிரித்து யாரையோ 500, 1000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைப்பதை விட இது சிறந்தது எனவும் கூறியுள்ளார்.
News March 10, 2026
புதுச்சேரியில் மகளிர் வங்கி கணக்கில் ₹5,000 டெபாசிட்

தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும் மகளிர் வங்கி கணக்கில் இன்று ₹5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான உரிமை தொகை ₹5,000 மொத்தமாக வழங்கப்படும் என CM ரங்கசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி, 63,000 குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ₹31.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


