News January 20, 2026

கவர்னர் பதவி நீக்கப்பட வேண்டும்: வேல்முருகன்

image

சட்டப்பேரவை மரபுகளை காலடியில் போட்டு மிதிக்கும் எந்த செயலையும், TN மக்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என கவர்னருக்கு வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். 8 கோடி மக்களின் நம்பிக்கை பெற்ற சட்டப்பேரவை வெறும் ஒரு நிர்வாக மன்றம் அல்ல. அது TN மக்களின் ஜனநாயகக் குரல் என்றும், மக்கள் அதிகாரத்தை மீறி மாநில உரிமைகளை நசுக்கும் கவர்னர் பதவி முற்றிலும் நீக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News January 29, 2026

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: EPS

image

சென்னை தரமணியில் பீகார் மாநில இளைஞர், அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய மூவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக EPS தெரிவித்துள்ளார். மேலும், இச்சம்பவம் வந்தாரை வாழவைக்கும் TN-ல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி சந்தி சிரிக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுவதாகவும், இந்த கொடூர கொலைகளுக்கு பொம்மை CM என்ன சொல்ல போகிறார் என்றும் விமர்சித்துள்ளார்.

News January 29, 2026

மக்கள் மனம் வென்ற டாப் 3 அலங்கார ஊர்திகள்!

image

2026 குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற மாநில அலங்கார ஊர்திகளுக்கான பரிசை மத்திய அரசு அறிவித்துள்ளது. வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகள் என்ற கருப்பொருளுடன் TN உட்பட 30 அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. இந்நிலையில் Mygov இணையதளத்தில் மக்கள் வாக்களித்ததன் அடிப்படையில் தற்போது முடிவுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி சிறந்த 3 அலங்கார ஊர்திகள் எவை என்பதை வலதுபக்கம் Swipe செய்து பார்க்கலாம்.

News January 29, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 595 ▶குறள்: வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு. ▶பொருள்: தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.

error: Content is protected !!