News January 17, 2026

கள்ளக்குறிச்சி: நிறைவேறாத ஆசையால் முதியவர் தற்கொலை!

image

மணலூர்பேட்டையை சேர்ந்த கண்ணன் (68), தனது மகன் ரகோத்தமனிடம் லாரி வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் மகன் அவரது வயதை காரணம் காட்டி மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த கண்ணன், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 8, 2026

கள்ளக்குறிச்சி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக் <<>>செய்து இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News February 8, 2026

கள்ளக்குறிச்சி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

கள்ளக்குறிச்சி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT

News February 8, 2026

கள்ளக்குறிச்சி: பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

image

வாணாபுரம் அருகே உள்ள சித்தால் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்(35). இவருடைய மனைவி அருள்மொழி (30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், வினோத் குடும்பத்தினர் அருள்மொழியிடம் வர தட்சணையாக ரூ.2 லட்சம் கேட்டுள்ளனர். ஆனால் அருள்மொழி குடும்பத்தினர், ரூ.2 லட்சம் கொடுக்காத நிலையில் வினோத்திற்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

error: Content is protected !!