News February 13, 2026
கள்ளக்குறிச்சியில் தவறி விழுந்து சாவு!

புதுப்பட்டு, பாராதியார் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன்(78). சம்பவத்தன்று இவர், வீட்டின் படியில் இறங்கினார். அப்போது திடீரென கீழே விழுந்ததில் படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து. மேல் சிகிச்சைக்காக புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News March 11, 2026
கள்ளக்குறிச்சிக்கு துணை முதலமைச்சர் வருகை!

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாகத் திமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த வருகையின் போது, மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு அரசுத் திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க உள்ளார்.
News March 11, 2026
கள்ளக்குறிச்சி: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News March 11, 2026
கள்ளக்குறிச்சி: பள்ளிக்கு சென்ற மாணவி திடீர் சாவு!

சங்கராபுரத்தை சேர்ந்த சவரிநாதனின் 4 வயது மகள், தனியார் பள்ளியில் UKG பயின்று வந்தார். நேற்று முன்தினம் சளித் தொந்தரவால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமியை, பெற்றோர் தேற்றி பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். பள்ளியில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


