News March 24, 2024

கன்னியாகுமரி: செல்போன் பறித்த சிறுவர்கள் கைது

image

கன்னியாகுமரி அருகே உள்ள சிலுவை நகர் பகுதியை சேர்ந்தவர் சூசை (57), மீனவர்.
இவர் கன்னியாகுமரியில் சீரோ பாயிண்ட் பகுதியில் நேற்று செல்போன் பேசிய படி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது 15 வயது மதிக்கத்தக்க 3 சிறுவர்கள் அவரை பின் தொடர்ந்து வந்தனர். திடீரென சூசை கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் 3 சிறுவர்களையும் கைது செய்தனர்.

Similar News

News February 9, 2026

குமரி: Certificate திரும்ப பெறுவது இனி சுலபம்!

image

கன்னியாகுமரி மக்களே; உங்களது 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது, <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News February 9, 2026

குமரி: இளம்பெண்ணை வெட்டிக் கொன்ற சித்தப்பா.!

image

தலக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுபிதா (28). இவர் கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். அப்போது அவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், சுபிதா நேற்று அவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த அவரது சித்தப்பா ராஜேஷ் சுபிதாவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் சுபிதா சம்பவ இடத்திலேயே இறந்தார். இரணியல் போலீசார் வழக்கு பதிந்து ராஜேஷை கைது செய்தனர்.

News February 9, 2026

குமரி: நண்பர் இறந்த துக்கத்தில் இளைஞர் தற்கொலை.!

image

செண்பகராமன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (20). இவர் ஐடிஐ படித்து வந்தார். இவர் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். ஆரல்வாய்மொழி போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், வசந்தகுமாரின் நண்பர் முத்து கிஷோர் கடந்த 3ம் தேதி தற்கொலை செய்த நிலையில், மன வேதனையில் வசந்தகுமாரும் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

error: Content is protected !!