News November 7, 2025
எறும்புக்கு பயந்து பெண் தற்கொலை!

சில விஷயங்கள் மீதான அதீத பயத்திற்கு ஃபோபியா என்று பெயர். அப்படி ஒரு ஃபோபியா, உயிர் ஒன்றை பறித்த சம்பவம் தெலங்கானா, சங்காரெட்டியில் நடந்துள்ளது. Myrmecophobia என்ற எறும்புகள் மீதான தீவிர பயத்தால், கணவனையும், 3 வயது மகளையும் விட்டுவிட்டு, பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். அவர் எழுதி வைத்த கடிதத்தில், ‘இனிமேல் எறும்புகளுடன் வாழ முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News February 16, 2026
மகளிருக்கு ₹5,000 ‘Severance Package’: அதிமுக அதிரடி

TN அரசு வழங்கிய ₹5,000, அரசியல் களத்தில் Hot டாபிக்காக உள்ளது. SC/ST துறையின் நிதியை மடைமாற்றம் செய்து வழங்கியதாக எழுந்த சர்ச்சை, அதற்கு <<19151267>>அரசு விளக்கம்<<>>. மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத <<19147751>>பெண்களின் ஆதங்கம்<<>>. என அடுத்தடுத்து செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் IT நிறுவனங்களில் Lay off செய்துவிட்டு கொடுக்கும் நஷ்டஈடுபோன்ற Severance Package என அதிமுகவின் IT விங் தலைவர் ராஜ் சத்யன் சாடியுள்ளார்.
News February 16, 2026
அத்வாலேவை களமிறக்கும் பாஜக வியூகம் எடுபடுமா?

தமிழகத்தில் இதுவரை <<19146858>>கால் பதிக்காத அத்வாலே<<>>, கரும்பு சின்னத்தில் 51 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்தது கவனம் பெற்றுள்ளது. அத்வாலேவின் இந்த முடிவுக்கு பின்னால் பாஜக உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே திமுக கூட்டணியின் தலித் ஓட்டுகளை குறிவைத்து விஜய் அரசியல் செய்கிறார். இந்நிலையில் தலித் மக்கள் அதிகம் இருக்கும் 51 தொகுதிகளில் தலா 500 ஓட்டுகள் பிரித்தாலும் அது திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாம்.
News February 16, 2026
ஒரே தொகுதியில் 140 வேட்பாளர்கள் வாபஸ்.. REWIND

கடந்த 2011 தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதியில் 151 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், 140 பேர் வாபஸ் பெற்றனர். இந்த 140 பேரும் திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழுவின் சார்பில் மனு தாக்கல் செய்தவர்கள். சாய தொழிலுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காண கோரி இவ்வாறு செய்தனர். பின்னர் அரசியல் கட்சிகள் கொடுத்த வாக்குறுதியை ஏற்று 140 பேரும் வாபஸ் பெற்றனர்.


