News February 6, 2026

உளுந்தூர்பேட்டை: கேஸ் சிலிண்டர் அடியில் இருந்த பாம்பு!

image

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மனங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(42). கூலித் தொழிலாளியான இவரது வீட்டு சமையல் அறை, கேஸ் சிலிண்டர் அடியே 6 அடி நீளம் கொண்ட சாரைப் பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன், உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

Similar News

News February 8, 2026

கள்ளக்குறிச்சி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

கள்ளக்குறிச்சி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT

News February 8, 2026

கள்ளக்குறிச்சி: பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

image

வாணாபுரம் அருகே உள்ள சித்தால் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்(35). இவருடைய மனைவி அருள்மொழி (30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், வினோத் குடும்பத்தினர் அருள்மொழியிடம் வர தட்சணையாக ரூ.2 லட்சம் கேட்டுள்ளனர். ஆனால் அருள்மொழி குடும்பத்தினர், ரூ.2 லட்சம் கொடுக்காத நிலையில் வினோத்திற்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

News February 8, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (பிப்.7) இரவு முதல் இன்று (பிப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!