News April 15, 2024

உரம் கலந்த கண்ணீரை குடித்த 13 ஆடுகள் பலி

image

கள்ளக்குறிச்சி வானாபுரம் அடுத்து ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த ரேகா என்பவர் நேற்று தனது 13 ஆடுகளை
ஏந்தல் பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது அங்கு, விளைநிலத்தில் இருந்த தொட்டியில் ஆடுகள் தண்ணீர் குடித்தன. சிறிது நேரத்தில் 13 ஆடுகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சுருண்டு விழுந்து இறந்தன. போலீஸ் விசாரனையில் தொட்டி தண்ணீரில் உரம் கலந்திருப்பது தெரியவந்தது.

Similar News

News February 8, 2026

கள்ளக்குறிச்சி மாவட்டம் – ஓர் பார்வை!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்,
1) மக்களவைத் தொகுதி – 1,
2) சட்டமன்றத் தொகுதிகள் – 4,
3) நகராட்சிகள் – 3,
4) வருவாய் கோட்டங்கள் – 2,
5) வட்டங்கள் – 7,
6) பேரூராட்சிகள் – 5,
7) ஊராட்சி ஒன்றியங்கள் – 9,
8) ஊராட்சிகள் – 412,
9) வருவாய் கிராமங்கள் – 562 உள்ளன.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பாண்ணுங்க!

News February 8, 2026

கள்ளக்குறிச்சி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக் <<>>செய்து இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News February 8, 2026

கள்ளக்குறிச்சி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

கள்ளக்குறிச்சி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT

error: Content is protected !!