News February 15, 2026

இவர்களுக்கு ₹2,000 கிடைக்காது.. இதான் காரணம்

image

PM கிசான் திட்டத்தின் கீழ் 22-வது தவணைத்தொகை ₹2,000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் சில சிக்கல்கள் ஏற்படலாம். வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்கவில்லை என்றாலோ, e-KYC-ஐ முழுமையாக முடிக்கவில்லை, Unique ID-ஐ பெறவில்லை என்றாலோ இந்த தொகை கிடைக்காமல் போகலாம். எனவே, வட்டார வேளாண் உதவி இயக்குநர் ஆபிசில் நில ஆவணங்கள், சிட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை வழங்கி Unique ID பெறுங்கள்.

Similar News

News February 15, 2026

பாஜகவின் சதியை CM முறியடித்தார்: உதயநிதி

image

தேர்தலை காரணம் காட்டி எப்படியாவது மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிடலாம் என்று பாஜகவும், அதன் அடிமை கூட்டங்களும் முயற்சி செய்ததாக DCM உதயநிதி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், அதனை CM ஸ்டாலின் முறியடித்துள்ளார் என்றார். மேலும், ஜனவரியில் மகளிர் உரிமைத் தொகை ₹1,000, பொங்கல் பரிசு ₹3,000 & தற்போது ₹3,000 + ₹2,000 என 2 மாதங்களில் மொத்தம் ₹9,000 மகளிரிடம் CM கொண்டு சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.

News February 15, 2026

மக்கள் நாயகன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

image

நாட்டை காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டிருந்த ரியல் ஹீரோவான குமரியை சேர்ந்த குமாரதாஸ்(37) ராஜஸ்தானில் உயிரிழந்தார். அவரது உடல் டெல்லியிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டுவரப்பட்டு, பின்னர், அவரது சொந்த ஊரான கைதோட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. குமாரதாஸின் உறவினர்கள், அரசு அதிகாரிகள், மக்கள் என ஏராளமானோரின் அஞ்சலிக்கு பிறகு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. #RIP

News February 15, 2026

₹2,000 கொடுத்து ஜெயிக்கலாம் என்பது மூடநம்பிக்கை: பிரவீன்

image

மகளிர் உரிமைத் தொகையை கொடுத்து ஜெயிக்கலாம் என நினைத்தால் அது மூடநம்பிக்கை என பிரவீன் சக்ரவர்த்தி கூறியுள்ளார். மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம் என்ற அவர், அதனை செயல்படுத்தியது பாராட்டத்தக்கது என்றார். ஆனால் அது மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என சொல்லமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!