News February 6, 2026

இன்று தை கடைசி வெள்ளி.. இதை மறக்காம பண்ணிடுங்க

image

எலுமிச்சை மாலை சாற்றுவதன் மூலம், அம்மனின் முழு அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஆடி மாதமும், தை மாதமும் அம்மனுக்கு விசேஷமான காலங்கள் என்பதால், தை கடைசி வெள்ளி கிழமையான இன்று அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று தவறாமல் எலுமிச்சை பழ மாலை சாற்றி வழிபடுங்கள். குறிப்பாக, ராகு காலத்தில் துர்கையம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி, எலுமிச்சை தீபம் ஏற்றினால் ராகு தோஷம் நீங்கும் என்பது ஆன்மிக மரபு.

Similar News

News February 20, 2026

லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்

image

FC கட்டண உயர்வு மூன்று மாதங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். பழைய கட்டணமான ₹800 மட்டும் செலுத்தி தகுதிச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என்று TN அரசு அரசாணை வெளியிட்டது. இதனையடுத்து, பிப்.25 முதல் நடைபெறவிருந்த காலவரையற்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News February 20, 2026

நாளை பள்ளிகள் விடுமுறை இல்லை.. கலெக்டர் அறிவிப்பு

image

நாளை(பிப்.21) சனிக்கிழமையாக இருந்தாலும், 2 மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும் என கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். அதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாட அட்டவணையை பின்பற்றி அனைத்து வகை பள்ளிகளும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தென்காசி மாவட்டத்தில் 2025 அக்.16 அன்று மழையால் விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடுசெய்ய, நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News February 20, 2026

மகளை பெற்ற தந்தையா… ஹேப்பி நியூஸ்

image

மகள்களை பெறாத தந்தையரை விட, மகள்களை பெற்ற தந்தையர் 2 ஆண்டுகள் கூடுதலாக வாழ்வதாகவும், அவர்களின் மனநலமும், சுயமதிப்பும் சிறப்பாக உள்ளதாகவும் போலந்து ஆய்வில் தெரிய வந்துள்ளது. மகன்கள் இருந்தாலும், இல்லையென்றாலும் மகள்கள் இருந்தால் சராசரியாக 74 வாரங்கள் தந்தையரின் ஆயுள் கூடுகிறதாம். அதேபோல குழந்தைகள் இல்லாத பெற்றோரை விட, குழந்தைகள் உள்ள பெற்றோர் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ்கிறார்களாம்.

error: Content is protected !!