News February 18, 2025
ஆத்மா சாந்தியடையவில்லை: போஸ்டரால் பரபரப்பு

கோவையில் பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் ஆத்மா சாந்தி அடையவில்லை என எம்.ஜி.ஆரின் தொண்டர் ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் வைரல் ஆகி வருகிறது. அதில் பகலும், இரவு எம்ஜிஆர் கட்சியை வளர்த்து முதலமைச்சார் ஆனார். ஆனால், தற்போது கட்சியில் பதவிக்காக சண்டை போடுகிறார்கள். எல்லோரும் ஒன்றாக இணைந்தால் தான் அவர் ஆத்மா சாந்தி அடையும் என குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.
Similar News
News March 4, 2026
அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோவில் மைதானத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் SP.வேலுமணி மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் KR.ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தனர்.
News March 4, 2026
கோவை: 91 வயதில் தேர்தலில் களம்

கோவை, வால்பாறை 12-வது வார்டு கருமலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 91 வயது முதியவர் சங்கரதாஸ், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் வால்பாறை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வரும் இவர், தனது முதிர்ந்த வயதிலும் மக்கள் பணியாற்ற ஆர்வம் காட்டி அண்ணா அறிவாலயத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
News March 4, 2026
கோவை: 91 வயதில் தேர்தலில் களம்

கோவை, வால்பாறை 12-வது வார்டு கருமலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 91 வயது முதியவர் சங்கரதாஸ், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் வால்பாறை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வரும் இவர், தனது முதிர்ந்த வயதிலும் மக்கள் பணியாற்ற ஆர்வம் காட்டி அண்ணா அறிவாலயத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


