News January 4, 2026
ஆட்சியில் பங்கு கேட்பது தவறில்லை: KS அழகிரி

அதிக இடங்களில் போட்டியிடவேண்டும் என்று நினைப்பதோ, ஆட்சி அதிகாரத்தில் பங்குவேண்டும் என்று கேட்பதோ தவறுகிடையாது என அழகிரி கூறியுள்ளார். மத சார்பின்மைக்காக காங்.,க்கு திமுகவைவிட சிறந்ததோழன் வேறு யாரும் இல்லை என்ற அவர், திமுக கூட்டணியிலிருந்து காங்., ஒருபோதும் வெளியேறாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மதச்சார்பின்மை என்ற ஒற்றைநோக்கமே அனைவரையும் ஒரே நேர்கோட்டில் கொண்டுசெல்கிறது எனவும் பேசியுள்ளார்.
Similar News
News February 11, 2026
இரும்புச் சத்தை அள்ளித் தரும் அதிசய விதை!

உங்கள் ரத்தத்தில் இரும்புச் சத்தை பன்மடங்கு அதிகரிக்கும் ஒரு அதிசய உணவுப்பொருள் தான் ஹலீம் சீட்ஸ். 100g ஹலீம் விதைகளில் 100mg இரும்புச் சத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன் ஒரு ஸ்பூன் விதைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, அதன்மீது சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, இரும்புச் சத்தை உடல் உறிஞ்ச உதவும்.
News February 11, 2026
நகைக் கடன்.. மக்களுக்கு ஷாக்

அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் நகைக் கடனை புதுப்பிப்பதில் சிக்கல் இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். நகைக் கடன் ஓராண்டு முடியும்போது, வட்டியை மட்டும் கட்டிவிட்டு கடனை புதுப்பிக்க வங்கி அதிகாரிகள் மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. முழுத் தொகையையும் செலுத்தி நகையை மீட்குமாறு நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். உங்க பகுதியிலும் இந்த பிரச்னை உள்ளதா?
News February 11, 2026
ஜெயலலிதா சொன்னதால் ’எடப்பாடி’ பெயர் வந்தது: EPS

ஜெயலலிதா எப்போதுமே சிறப்பாக செயல்பட வேண்டும் என எண்ணக்கூடியவர் என அவர் மீதான நினைவலைகளை <<19113803>>EPS பகிர்ந்துள்ளார்<<>>. தனியார் ஊடகத்தில் பேசிய அவர், தான் கட்சியில் சிறப்பாக செயல்பட்டதால் அமைப்பு செயலாளர், அமைச்சர் என பல பதவிகளை ஜெ., வழங்கினார் என்று தெரிவித்துள்ளார். பெயர் முன் ஊரின் பெயரை அடையாளமாக வைக்கும்படி ஜெயலலிதா சொன்னதாலே தனது பெயரை ’எடப்பாடி பழனிசாமி’ என மாற்றிக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.


