News January 7, 2026
அறிவித்தார் ராணிப்பேட்டை கலக்டர்!

திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15-ம் தேதி பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கவுரவிக்கும் வகையில், முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. 2026-ம் ஆண்டிற்கான விருது பெறுவதற்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (awards.tn.gov.in) பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ராணிப்பேட்டை சேர்ந்த திருநங்கைகள் பதிவு செய்யலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்
Similar News
News February 6, 2026
ராணிப்பேட்டையில் துடிதுடித்து பலி!

புலிவலம் பகுதியில் நேற்று (பிப்.5) இரவு புல்லட் ஒன்று புதரில் விழுந்து கிடந்தது. இதில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை அப்பகுதி மக்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த அந்நபர் இன்று (பிப்.6) உயிரிழந்தார். இது குறித்து கொண்டபாளையம் போலீசார் விசாரித்ததில் அந்நபர் நந்திமங்கலத்தை சேர்ந்த முருகன் (42) என்பது தெரிய வந்தது.
News February 6, 2026
ராணிப்பேட்டையில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

அரக்கோணம், பள்ளூர், தக்கோலம் மற்றும் புன்னை ஆகிய துணை மின் நிலையங்களுக்கு நாளை (பிப்.7) மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி காலை 9 – 3 மணி வரை மோசூர், அரக்கோணம் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி., எச்.டி.சர்வீசஸ், அரக்கோணம் நகரம், காவனூர், ஆனைபாக்கம், அம்பிரிஷிபுரம், கீழ்குப்பம், நாகவேடு, புளியமங்கலம், ஆத்தூர், செய்யூர், நகரிகுப்பம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
News February 6, 2026
ராணிப்பேட்டையில் தூக்கி வீசப்பட்டு பலி!

ஆற்காடு, நக்கீரன் தெருவை சேர்ந்தவர் தரணிபாய் (78). இவர், நேற்று (பிப்.5) காலை ஆற்காடு அண்ணா சிலை அருகே சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக சென்ற வேன் திடீரென தரணிபாய் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தரணிபாய் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


