News February 12, 2026

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா

image

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் (பிப்ரவரி 12) புதிய பேருந்து நிலையம் ரூ.15 கோடி செலவில் நவீன பேருந்து நிலையமாக கூடிய ஸ்மார்ட் பஸ் ஸ்டாண்ட் ஆக கடந்த மூன்றாண்டாக கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் பணிகள் நிறைவு பெற்று நாளைய தினம் (பிப் 13) அன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது. நீண்ட நாள் பணிக்கு பின் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவதால் மக்கள் ஆர்வமாக அதை காண உள்ளனர்.

Similar News

News February 16, 2026

விருதுநகர்: மகளிருக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி

image

தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு தொடங்கி 6 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். பிசி, எம்பிசி, சீர்மரபினர்கள் இந்த கடனை பெற முடியும். மேலும் இந்த கடனை பெற கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகம் கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் <>www.tabcedco.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க.

News February 16, 2026

விருதுநகர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க

News February 16, 2026

விருதுநகர்: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால்..!

image

விருதுநகர் மக்களே; உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

error: Content is protected !!