News January 14, 2026
அடக்குமுறையின் உச்சத்தில் திமுக அரசு: சீமான்

கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய ஈசன் முருகசாமி உட்பட 9 பேரை திமுக அரசு விடுவிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். பட்டப்பகலில் கொலை, பாலியல் வன்கொடுமை செய்வோரை கைது செய்யாத திமுக அரசு, அப்பாவி விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுவதாக அவர் X-ல் சாடியுள்ளார். இது அடக்குமுறையின் உச்சம் என்று குறிப்பிட்டுள்ள சீமான், அவர்களுக்கு எதிரான வழக்கை திரும்பபெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News February 19, 2026
BREAKING: இன்று இரவு.. விஜய் அவசர முடிவு

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்த நிலையில், தவெக தலைவர் விஜய் திடீர் முடிவை எடுத்திருக்கிறார். இன்று இரவு மா.செ.,க்களுடன் விஜய் & புஸ்ஸி ஆனந்த் அவசர ஆலோசனை நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. காணொலி வாயிலாக நடைபெறவிருக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தலில் தனித்து போட்டியிடுவது, வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது மற்றும் விஜய் போட்டியிடும் தொகுதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாம்.
News February 19, 2026
Flying Kiss கொடுத்தவருக்கு 3 ஆண்டு சிறை

16 வயது சிறுமிக்கு Flying Kiss கொடுத்தவருக்கு மும்பை ஸ்பெஷல் கோர்ட் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. 2017-ல் நடந்த சம்பவத்துக்கு 9 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. Flying Kiss பாதிப்பில்லாதது போல் தோன்றினாலும், அது சட்டப்படி பெண்ணின் கண்ணியத்தை மீறும் பாலியல் ரீதியான செயல் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவருக்கு தற்போது திருமணமாகி ஒரு கைக்குழந்தையும் உள்ளது.
News February 19, 2026
இந்திய ஸ்நாக்ஸை துரத்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

இந்திய ஸ்நாக்ஸ் சந்தையில் ₹5 அல்லது ₹10 பாக்கெட்டுகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இதன் சந்தையின் மதிப்பு 2027-ம் ஆண்டுக்குள் ₹1,21,700 கோடியை எட்டும் என்று தொழில்துறை வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. சிப்ஸ், வேஃபர்கள் மட்டுமல்லாமல் முறுக்கு, மிக்சர் போன்ற ஸ்நாக்ஸ் சந்தையில் 43% -ஐ பிடித்துள்ளன. இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய ஸ்நாக்ஸ் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.


