News April 16, 2025
மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500: கீதா ஜீவன்

தமிழகத்தில் 7.88 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500 உதவித் தொகை வழங்கப்படுவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இதேபோல், அறிவுசார் குறைபாடு உடையோர், தொழுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு மாதம் ₹2,000 பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்தத் தொகை ஒவ்வாெரு மாதமும் 5-ம் தேதி வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.
Similar News
News January 29, 2026
ஜனவரி 29: வரலாற்றில் இன்று

*1939- சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். *1780 – இந்தியாவின் முதல் செய்தித்தாளான ஹிக்கியின் பெங்கால் கெஜட் தொடங்கப்பட்டது. 1953- ஏர் இந்தியா தேசியமயமாக்கப்பட்டு இந்திய ஏர்லைன்ஸ் உருவானது. *1970 – இந்திய துப்பாக்கிச்சூடு வீரரான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பிறந்ததினம். *2009 – ஈழத்தமிழர்களுக்காக தனக்குத்தானே தீயிட்டு உயிர்மாய்த்த முத்துக்குமார் நினைவுதினம்.
News January 29, 2026
இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து படைத்த சாதனை!

இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் சில முக்கிய சாதனைகளை நியூசி., படைத்துள்ளது. அதன்படி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. டி20-யில் பலம் வாய்ந்த இந்திய அணியை அதிக முறை (5) இலக்கை எட்டவிடாமல் தடுத்து முதலிடம். மேலும் செப். 2023 முதல் 13 போட்டிகளுக்கு பிறகு நியூசி. முதல் வெற்றி பெற்றுள்ளது.
News January 29, 2026
தொண்டர்களின் விருப்பமாக கூட்டணி அமையும்: பிரேமலதா

கூட்டணி குறித்து உரிய நேரத்தில் தலைமை கழகத்தில் இருந்து அறிவிப்பேன் என பிரேமலதா தெரிவித்துள்ளார். புளியங்குடியில் பேசிய அவர், கடைக்கோடி தொண்டர்களின் விருப்பத்தின் படியே இந்த முறை கூட்டணி அமையும் என்றும், நாம் இடம்பெறும் கூட்டணி தான் இந்தமுறை ஆட்சி அமைக்கும் எனவும் கூறினார். அப்போது அங்கிருந்த தொண்டர்கள் சிலர், தவெக தவெக என கோஷமிட்டதால் அப்பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.


