News April 16, 2025

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500: கீதா ஜீவன்

image

தமிழகத்தில் 7.88 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500 உதவித் தொகை வழங்கப்படுவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இதேபோல், அறிவுசார் குறைபாடு உடையோர், தொழுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு மாதம் ₹2,000 பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்தத் தொகை ஒவ்வாெரு மாதமும் 5-ம் தேதி வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.

Similar News

News December 12, 2025

சஞ்சுவுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க!

image

2-வது T20-ல் இந்தியாவின் சொதப்பலான பேட்டிங்கே தோல்விக்கு காரணம். தானும் கில்லும் சரியாக விளையாடவில்லை என கேப்டன் SKY-யே கூறிய நிலையில், சஞ்சுவுக்கு வாய்ப்பு வழங்க கோரிக்கை வலுத்துள்ளது. T20-ல் 3 சதங்களை விளாசிய சஞ்சு சாம்சன், அதில் இரண்டை SA-வுக்கு எதிராக தான் விளாசியுள்ளார். கில்லிற்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்துவிட்டு சஞ்சுவை சேர்க்கலாமே என நெட்டிசன்கள் வலியுறுத்துகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News December 12, 2025

3-ம் உலகப்போர்: டிரம்ப் வார்னிங்!

image

4-வது ஆண்டை நெருங்கி வரும் ரஷ்யா-உக்ரைன் போர் மேலும் தொடர்ந்தால், அது ஒரு 3-ம் உலகப் போராக மாறக்கூடும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த மாதம் மட்டும் சுமார் 25,000 பேர் இந்த போரில் உயிரிழந்துள்ளதாக கூறிய அவர், இந்த போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனிடையே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால், டிரம்ப் விரக்தியில் உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

News December 12, 2025

சபரிமலையில் மேலும் ஒரு தமிழர் உள்பட 19 பேர் மரணம்

image

சபரிமலைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு பக்தர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வமணி(40) என்ற பக்தர் மலைப்பாதையில் மயங்கி விழுந்த போது உயிர் பிரிந்துள்ளது. நவ.16-ல் நடை திறக்கப்பட்ட நிலையில், TN-ல் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் சபரிமலை கோயிலுக்கு சென்று வருகின்றனர். நடப்பு சீசனில் கோவை, கடலூரை சேர்ந்த பக்தர்கள் உட்பட 19 பேர் மாரடைப்பு மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர்.

error: Content is protected !!