News April 16, 2025
மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500: கீதா ஜீவன்

தமிழகத்தில் 7.88 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500 உதவித் தொகை வழங்கப்படுவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இதேபோல், அறிவுசார் குறைபாடு உடையோர், தொழுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு மாதம் ₹2,000 பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்தத் தொகை ஒவ்வாெரு மாதமும் 5-ம் தேதி வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.
Similar News
News February 6, 2026
ரெப்போ வட்டி என்றால் என்ன தெரியுமா?

RBI-ன் ரெப்போ வட்டி 5.25% ஆக இருக்கும் நிலையில், வங்கிகள் கொடுக்கும் கடனுக்கு வட்டி ஏன் அதிகமாக உள்ளது தெரியுமா? வங்கிகள், குறுகிய கால நிதி தேவைக்காக RBI-யிடம் வாங்கும் கடனுக்கு விதிக்கப்படுவதே ரெப்போ வட்டி(5.25%). ஆனால், வங்கிகள் வழங்கும் கடன்களில், ரெப்போ வட்டியுடன் செயல்பாட்டு செலவுகள், ஆபத்து, லாப விகிதம் போன்றவற்றையும் கூட்டுகின்றன. இதனால், லோன்களுக்கு கூடுதலாக நாம் வட்டி கட்டுகிறோம்.
News February 6, 2026
வீட்டில் அழுக்கான இடம் இதுவா…. ஷாக் மேட்டர்!

நம் வீட்டில் நோய்கள் உண்டாக்கும் கிருமிகள் நிறைந்துள்ள இடம் சமையலறை தானாம். ஆம், பாத்திரம் துலக்க பயன்படுத்தும் ஸ்பான்ஜில் தான் அதிக எண்ணிக்கையில் கிருமிகள் உள்ளன. இதற்கு அடுத்து கிச்சன் சிங்க், டூத் பிரஷ் மற்றும் அதன் ஸ்டாண்ட், ரிமோட் கன்ட்ரோல், கீபோர்ட், காஃபி மேக்கர், பாத்ரூம் ஷெல்ப், டவல்கள், மிதியடிகள் மற்றும் கதவுகளின் கைப்பிடிகளில் கிருமிகள் நிறைந்துள்ளன. சுத்தம் பராமரியுங்கள்!
News February 6, 2026
மாதம் ₹7,000.. உடனே இதை பண்ணுங்க!

கிராமப்புற பகுதிகளில் உள்ள 18-70 வயதுடைய பெண்களுக்கு எல்ஐசி முகவர்களாக பணியாற்றுவதற்கான பயிற்சி மற்றும் மாதந்தோறும் ₹7,000 உதவித்தொகையை எல்ஐசி பீமா சகி யோஜனா திட்டம் வழங்குகிறது. உதவித்தொகையோடு அளிக்கப்படும் இந்த 3 ஆண்டு பயிற்சியை முடித்த பிறகு LIC முகவர்களாக பெண்கள் பணியாற்றலாம். இதற்கு 10-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்ளை செய்ய இங்க <


