News April 16, 2025
மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500: கீதா ஜீவன்

தமிழகத்தில் 7.88 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500 உதவித் தொகை வழங்கப்படுவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இதேபோல், அறிவுசார் குறைபாடு உடையோர், தொழுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு மாதம் ₹2,000 பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்தத் தொகை ஒவ்வாெரு மாதமும் 5-ம் தேதி வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.
Similar News
News February 13, 2026
₹50,000 கொடுத்தாலும் திமுக தோற்கும்: TTV தினகரன்

தோல்வி பயத்தில் எத்தனை அறிவிப்புகளை திமுக வெளியிட்டாலும், அது மக்களிடம் எடுபடாது என TTV தெரிவித்துள்ளார். தனது X பதிவில் அவர், ₹2,000 அறிவித்ததன் பின்னணியில் இருப்பது தேர்தல் தோல்வி பயமே தவிர, மகளிர் மீதான அக்கறை கிடையாது என சாடியுள்ளார். மேலும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ₹2,000 வழங்குவதாக வாக்குறுதியளிப்பது ஏமாற்று வேலை என்றும், ₹50,000 கொடுத்தாலும் திமுக தோற்கும் எனவும் கூறியுள்ளார்.
News February 13, 2026
SHOCKING: கொலை செய்ய தயாரான AI

AI இவ்வளவு ஆபத்தானதா? ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய AI மாடல் அழுத்தமான சோதனையின்போது அபாயகரமாக செயல்பட்டதாக அதன் கொள்கைத் தலைவர் டெய்சி மெக்ரிகோர் கூறியுள்ளார். அந்த மாடலை நிறுத்தப்போவதாக அதனிடம் கூறியபோது, அது பொறியாளரை கொலை செய்ய போவதாக அச்சுறுத்தியதாக கவலை தெரிவித்தார். சிந்திக்கும் திறன்களை கொண்ட AI மீதான கட்டுப்பாடு இல்லையென்றால் அது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இது சான்றாகும்.
News February 13, 2026
நான் வீசிய Bomb தாறுமாறா வெடிக்குது: விஜய்

விக்ரவாண்டி மாநாட்டில் தான் வீசிய Political Bomb அனைத்து கூட்டணியிலும் தற்போது வெடித்துக்கொண்டிருப்பதாக விஜய் கூறியுள்ளார். CM ஸ்டாலின் பதறுவதாக கூறிய அவர், ஆட்சியில் பங்கு TN-க்கு ஒத்துவராது என CM சொல்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவை பொறுத்தவரை ஆட்சி அமைக்க மட்டுமே கூட்டணி எனவும் மற்றவைக்கு அவர்கள் தனி அணி எனவும் விமர்சித்துள்ளார்.


