News April 16, 2025
மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500: கீதா ஜீவன்

தமிழகத்தில் 7.88 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500 உதவித் தொகை வழங்கப்படுவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இதேபோல், அறிவுசார் குறைபாடு உடையோர், தொழுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு மாதம் ₹2,000 பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்தத் தொகை ஒவ்வாெரு மாதமும் 5-ம் தேதி வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.
Similar News
News January 25, 2026
நெல்லை: ஒரே நாளில் 5 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்!

நெல்லை மாநகரப் பகுதியில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த மேலப்பாளையம் போலீசார் அமீர் சுகைல் (24), ரத்தினபாலன் (38), திண்டுக்கல், பள்ளபட்டியை சேர்ந்த சாகுல் ஹமீது (26), முஸ்ஸமில் முர்சித் (21) ஆகிய 5 பேரை கைது செய்தனர். போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் பதிவு செய்து 5 பேரை சிறையில் அடைத்தனர்
News January 25, 2026
12 பேரை காதலித்த தமிழ் நடிகை

ஒருவரை காதலித்து கரம் பிடிப்பதே பெரிய சோதனையாக இருக்கும் நிலையில், இங்கு ஒருவர் 12 பேரை காதலித்து டேட்டிங் செய்திருக்கிறார். ‘பம்பாய்’, ‘இந்தியன்’, ‘பாபா’ படங்களில் நடித்து தமிழில் ஒரு கலக்கு கலக்கிய மனிஷா கொய்ராலா பீக்கில் இருந்த காலத்தில் 12 பேரை காதலித்துள்ளாராம். கடைசியாக, தொழிலதிபரான சாம்ராட் தஹாலை திருமணம் செய்த அவர், அடுத்த 2 வருடங்களிலேயே அவரை விவகாரத்து செய்துவிட்டார்.
News January 25, 2026
ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு மட்டும் போதாது: அன்புமணி

மொழிப்போர் தியாகிகள் தினத்தை கடைப்பிடிப்பதன் நோக்கம் ஹிந்தி திணிப்பை எதிர்ப்பது மட்டுமல்ல, தமிழை வளர்ப்பதும் தான் என அன்புமணி கூறியுள்ளார். தனது X-ல், தமிழ் கட்டாயப் பயிற்றுமொழி அரசாணை பிறப்பித்து 26 ஆண்டுகள் ஆகியும், இன்றுவரை நடைமுறைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார். SC-ல் நிலுவையில் உள்ள இதுகுறித்த வழக்குகளை விரைவாக விசாரணைக்கு கொண்டுவர திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சாடியுள்ளார்.


