News April 16, 2025

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500: கீதா ஜீவன்

image

தமிழகத்தில் 7.88 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500 உதவித் தொகை வழங்கப்படுவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இதேபோல், அறிவுசார் குறைபாடு உடையோர், தொழுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு மாதம் ₹2,000 பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்தத் தொகை ஒவ்வாெரு மாதமும் 5-ம் தேதி வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.

Similar News

News February 18, 2026

அதிமுகவில் அந்த 2 இடம் யாருக்கு?

image

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகி தமிழக அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது. பேரவையில் அதிமுக(62), பாமக(5), பாஜக(4) நிலவரப்படி அதிமுகவுக்கு 2 MP-க்கள் கிடைக்கும். இதில், தம்பிதுரை தனக்கு மீண்டும் சீட்டு கேட்கிறாராம். அதேபோல், அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாமக(அன்புமணி), ஒருவேளை கூட்டணிக்கு வந்தால் தேமுதிகவும் ஒரு MP சீட்டை கேட்கிறதாம்.

News February 18, 2026

மாநில சுயாட்சிக்காக சட்டம் இயற்ற வேண்டும்: CM ஸ்டாலின்

image

இந்தியாவை முதிர்ச்சியடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளை நாம் தொடங்க வேண்டும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் பேசிய அவர், கூட்டாட்சி தான் நாட்டுக்கு அரண் என்பதை மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும் என்றார். நிதி உரிமைக்காக இன்னும் போராட வேண்டிய சூழல் உள்ள நிலையில், மாநில சுயாட்சியை உறுதி செய்யும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

News February 18, 2026

ராவி நதி நீரை நிறுத்த திட்டம்.. பாகிஸ்தானுக்கு அடுத்த செக்!

image

ராவி நதியிலிருந்து பாக்., செல்லும் உபரி நீர் திறப்பை நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. JK நீர்வளத்துறை அமைச்சர் ஜாவேத், ஷாபூர் கண்டி அணை கட்டி முடிக்கப்பட்டதும், ராவி நதியின் உபரிநீர் பாகிஸ்தானுக்கு செல்வது நிறுத்தப்படும் என்றார். ஏற்கெனவே பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இதனால், பாக்.,கில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!