News April 16, 2025
மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500: கீதா ஜீவன்

தமிழகத்தில் 7.88 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500 உதவித் தொகை வழங்கப்படுவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இதேபோல், அறிவுசார் குறைபாடு உடையோர், தொழுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு மாதம் ₹2,000 பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்தத் தொகை ஒவ்வாெரு மாதமும் 5-ம் தேதி வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.
Similar News
News February 25, 2026
திமுக கூட்டணியில் விலக முடிவு? பரபரப்பு

திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருகிறது. இதற்கிடையில், <<19233813>>தவெகவுடன் <<>>காங்., கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பது சோடங்கர் பேட்டி மூலம் உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, விரைவில் திமுக கூட்டணியில் இருந்து விலகி, 60+ தொகுதிகளுடன் தவெகவுடன் காங்., கூட்டணி அமைக்கவிருப்பதாகவும், 2026 தேர்தல் களமே மாறப் போவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News February 25, 2026
வரியை 126% ஆக உயர்த்திய டிரம்ப்

இந்தியாவின் சோலார் பேனல்களுக்கு 126% வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, இதன் விலை USA-ல் இருமடங்காக உயரும். சோலார் உற்பத்திக்கு இந்திய அரசு நியாயமற்ற மானியங்கள் வழங்குவதால் US உற்பத்தியாளர்களை விட இந்திய ஏற்றுமதியாளர்கள் அதிக லாபம் பார்ப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்திய பொருள்களுக்கு USA-ல் வரிகள் குறையும் என கூறப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News February 25, 2026
தேர்வுக்கு இடையே குழந்தை பெற்ற பள்ளி மாணவி.. அதிர்ச்சி

மத்திய பிரதேசத்தின் பிதாம்பூரில் தனியார் பள்ளியில் கணித தேர்வு எழுதி கொண்டிருந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவம் நடந்துள்ளது. தேர்வுக்கு இடையே கழிப்பறைக்கு மாணவி சென்ற சிறிது நேரத்தில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. அங்குச் சென்ற டீச்சர்கள் மாணவி, குழந்தை இருவரையும் மீட்டு ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். 14 வயது மகளுக்கு நடந்த அவலத்தை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.


