News April 16, 2025
மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500: கீதா ஜீவன்

தமிழகத்தில் 7.88 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500 உதவித் தொகை வழங்கப்படுவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இதேபோல், அறிவுசார் குறைபாடு உடையோர், தொழுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு மாதம் ₹2,000 பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்தத் தொகை ஒவ்வாெரு மாதமும் 5-ம் தேதி வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.
Similar News
News February 3, 2026
பதவிக்காக மகளை கால்வாயில் வீசி கொன்ற தந்தை!

மகாராஷ்டிரா ஊராட்சி தேர்தலில் போட்டியிட, 3 குழந்தைகளுக்கு தந்தையான பாண்டுரங்(28) ஆசைப்பட்டார். ஆனால், அம்மாநிலத்தில் 2 குழந்தைகள் உள்ளவர்களே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விதி தடையாக இருந்தது. இதனால், மகளை கொல்ல முடிவு செய்து, 90 கி.மீ பயணித்து தெலங்கானாவுக்கு வந்து, மகளை கால்வாயில் வீசி கொன்றுள்ளார். தற்போது கடத்தல், கொலை வழக்குகளின் கீழ் அவர் கைதாகியுள்ளார். பதவி ஆசை எவ்வளவு கொடூரமானது!
News February 3, 2026
நாளை ₹1,200 வருகிறது.. அமைச்சர் அறிவித்தார்

60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்களுக்கு மாதந்தோறும் ₹1,200 வழங்கப்படுகிறது. இதில் புதிதாக அப்ளை செய்திருந்த 1.80 லட்சம் முதியோர்களுக்கு நாளை இத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஆதரவற்ற நிலையிலும், உணவுக்கு வழியில்லாமலும் கைவிடப்பட்டு நிற்கும் முதியோர்கள் இத்திட்டத்துக்கு Tamil Nadu e-Governance agency (TNeGA) என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
News February 3, 2026
இந்த துறைக்கு மட்டும் ஏன் இவ்வளவு நிதி?

நாட்டின் அனைத்து தரப்பு
மக்களையும் உள்ளடக்கிய
வளர்ச்சியே பட்ஜெட்டின் நோக்கம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். ராணுவத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை பற்றி பேசிய அவர், சிந்தூர் ஆபரேஷனுக்கு பிறகு பிற நாடுகள் ராணுவத்தில் அதிக முதலீடுகளை செய்யத் தொடங்கியிருப்பதாக கூறியுள்ளார். மேலும், இது யாரும் குறை கூற முடியாத பட்ஜெட் எனவும் பேசியுள்ளார்.


