News December 4, 2024

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்

image

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாரம்தோறும் புதன்கிழமை நடைபெறும் குறைதீர்வு கூட்டம் இன்று (டிசம்பர் 4) நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதிவாணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளிடம் வழங்கி விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும், இன்று நடந்த முகாமில் 19 மனுக்கள் பெறப்பட்டதாக தெரிவித்தனர்.

Similar News

News January 2, 2026

வேலூரில் மின்தடை – இதில் உங்க ஏரியா இருக்கா?

image

வேலூர்: வடுகந்தாங்கல், காரணம்பட்டு, மேல்பாடி, மோடிக்குப்பம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.3), பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் காரணமாக, கே.வி.குப்பம், மேல்மாயில், வடுகந்தாங்கல், அம்முண்டி, திருவலம், காரணம்பட்டு, மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வெப்பாலை, வீரந்தாங்கல் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

News January 2, 2026

வேலூர்: பெண்ணிடம் ரூ.1 கோடி மோசடி!

image

குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த பானுமதி (55), ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் பாஸ்கரன் (65) என்பவரிடம், கீழ்யாச்சூர் பகுதியில் 1.41 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்காக, ஒரு கோடி ரூபாயை கடந்த மே மாதம் வழங்கியுள்ளார். ஆனால், பாஸ்கரன் நிலத்தை அவருக்கு விற்காமல், வேறு ஒருவருக்கு விற்று விட்டு, பானுமதியிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி வந்தார். இதுகுறித்த புகாரில் பாஸ்கரனை போலீசார் கைது செய்தனர்.

News January 2, 2026

வேலூர்: 3 மாத குழந்தை பரிதாப பலி!

image

பேரணாம்பட்டு அருகே உள்ள கீழ்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன், அஸ்வினி தம்பதி. இவர்களது 3 மாத குழந்தை யஸ்வந்த். நேற்று இவர்களின் குழந்தை இறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அஸ்வினி மேல்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது பால் குடித்ததில் மூச்சுத் திணறி குழந்தை இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மேல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!