News November 23, 2024

விவசாய நிலத்தில் முதலை: உயிருடன் மீட்ட வனத்துறை

image

காட்டாங்கொளத்துார், கீரப்பாக்கம் அருகே உள்ள பெரிய அருங்கால் கிராமத்தின் அருகில் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில், 7 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று ஏரியில் இருந்து ஊர்ந்து ஊரப்பாக்கம் – நல்லம்பாக்கம் சாலையை கடந்து அருகில் உள்ள விவசாய நிலத்திற்குள் சென்றுள்ளது. தகவலறிந்து வந்த தாம்பரம் வனத்துறை அதிகாரிகள், முதலையை உயிருடன் பிடித்து வண்டலூரில் ஒப்படைத்தனர்.

Similar News

News December 17, 2025

செங்கல்பட்டு: தனிப் பட்டா பெறுவது எப்படி?

image

கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற, உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் மாற்ற <>இங்கு க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1)கூட்டு பட்டா
2)விற்பனை சான்றிதழ்
3)நில வரைபடம்
4)சொத்து வரி ரசீது
மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும்.(SHARE)

News December 17, 2025

செங்கல்பட்டு: போலீஸ் அத்துமீறலா..? ஓரு CALL போதும்!

image

செங்கல்பட்டு மக்களே.., போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை , விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 17, 2025

செங்கல்பட்டு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

செங்கல்பட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் டிச.19 அன்று நடைபெற உள்ளது. 50க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள், திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு சுமார் 5000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு 044-27426020/9499055895/ 9486870577/9384499848 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!