News November 23, 2024

விவசாய நிலத்தில் முதலை: உயிருடன் மீட்ட வனத்துறை

image

காட்டாங்கொளத்துார், கீரப்பாக்கம் அருகே உள்ள பெரிய அருங்கால் கிராமத்தின் அருகில் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில், 7 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று ஏரியில் இருந்து ஊர்ந்து ஊரப்பாக்கம் – நல்லம்பாக்கம் சாலையை கடந்து அருகில் உள்ள விவசாய நிலத்திற்குள் சென்றுள்ளது. தகவலறிந்து வந்த தாம்பரம் வனத்துறை அதிகாரிகள், முதலையை உயிருடன் பிடித்து வண்டலூரில் ஒப்படைத்தனர்.

Similar News

News January 11, 2026

செங்கல்பட்டு: துடிதுடித்து பலி!

image

செங்கல்பட்டு அடுத்த வல்லத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ரூபாவதி (56), நேற்று முன்தினம் இரவு நெம்மேலி பகுதியில் செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது , அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த ரூபாவதி சம்பவ இடத்திலேயே பலியானார். செங்கல்பட்டு தாலுகா போலீசார் தப்பியோடிய வாகனத்தை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

News January 11, 2026

செங்கல்பட்டில் கோர விபத்து

image

மதுராந்தகம் அருகே புளிபுரக்கோவில் பகுதியில் கூலி வேலைக்குச் செல்லும் சின்னப்பொண்ணு (72) என்பவரது குடிசையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. இதில், அங்கிருந்த அவரது பேரன் திவேஷ் (15) உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். வாய் பேச முடியாத மற்றும் பார்வையற்ற மாற்றத்திறனாளியான அச்சிறுவன் தீயிலிருந்து தப்பிக்க முடியாமல் போனது சோகத்தை ஏற்படுத்தியது.

News January 11, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஜனவரி-10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!