News November 24, 2024

விருதுநகரில் நிலம் தொடர்பான சிறப்பு குறை தீர் முகாம்

image

விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் நிலம் தொடர்பான கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில்(நவ.26) செவ்வாய் அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் நிலம் எடுப்பு, நில ஆக்கிரமிப்பு, பட்டா மாறுதல், பட்டா மேல்முறையீடு, பட்டா ரத்து, இலவச மனை பட்டா, நிலச் சீர்திருத்தம் தொடர்பான கோரிக்கைகளுக்கு மனுக்கள் அளிக்கலாம்.
*பகிரவும்*

Similar News

News November 27, 2025

விருதுநகர்: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க.
மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News November 27, 2025

விருதுநகர்: வாளியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

image

நத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (38). இவரது மனைவி வைதேகி. இவர்களது 2-வது குழந்தை கிருத்வீகா முத்ரா(2)வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், வைதேகி பால் வாங்க சென்றிருந்தார். அப்போது குழந்தை கிருத்வீகா முத்ரா பாத்ரூமில் உள்ள தண்ணீர் வாளியில் விளையாடிய போது, தண்ணீரில் தலைகுப்புற விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நத்தம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்

News November 27, 2025

விருதுநகர்: சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள்

image

சேத்துாரில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக வந்த புகாரை அடுத்து போலீசார் ரோந்து செய்தனர். அதில் தளவாய்புரம் பகுதி அருகே நான்கு பேரிடம் சோதனை செய்ததில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரித்ததில் கல்லுாரி மாணவர்கள் தளவாய்புரம் மு.வினோத்குமார் 19, முகவூர் பி.வினோத்குமார், சதீஷ்குமார், முத்துச்சாமி புரத்தை சேர்ந்த இளைஞர் அன்பு ராஜ் 23, நான்கு பேர் என தெரிந்து கைது செய்தனர்.

error: Content is protected !!