News April 18, 2025
வடசேரியில் அரசு பேருந்தில் ஆண் பிணம்

நெல்லையிலிருந்து நேற்று இரவு நாகர்கோவில் வரசேரிக்கு வந்த அரசு பேருந்தில் அனைத்து பயணிகளும் இறங்கிய பின்னர் 50 வயதான ஆண் மட்டும் இருக்கையில் சாய்ந்தபடி இருந்துள்ளார். தூக்கிய நிலையில் இருப்பதாக நினைத்து அவரை நடத்துனர் எழுப்பிய போது அவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த வடசேரி போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 23, 2026
குமரியில் 2500 போலீஸ் பாதுகாப்பு – எஸ்.பி தகவல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளையும் நாளை மறுதினமும் குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதனை ஒட்டி குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது முதலமைச்சர் வருவதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக அவர் கூறினார்.
News February 23, 2026
குமரி: ஒரு மெசேஜ் போதும் உடனடி தீர்வு !

குமரி மக்களே; உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், குமரி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இதை மறக்காம SHARE பண்ணுங்க.
News February 23, 2026
BREAKING குமரியில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளையும் நாளை மறுநாளும் குமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையொட்டி குமரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொட்டாரம் அனைத்து வாகனங்களும் மகாதானபுரம் ரவுண்டானா, முருகன் குன்றம் வழியாக அனுமதிக்கப்படும் குமரி ரவுண்டானாவிற்கு எந்த வாகனமும் அனுமதிக்கப்படமாட்டாது. நாயுடு ஆஸ்பத்திரி முதல் ஈத்தாமொழி விலக்கு வரை எந்த வாகனமும் அனுமதி இல்லை.


