News April 19, 2025
லாரியில் சிக்கி 5 கி.மீ., இழுத்து செல்லப்பட்ட இளைஞரின் உடல்

மதுரை, வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் 30. இவருக்கு மனைவி பிரியா 25, 2 மகள்கள் உள்ளனர். நேற்று அதிகாலை வாடிப்பட்டியிலிருந்து டூவீலரில் சென்றபோது ஆண்டிபட்டி பங்களா அருகே மதுரை நோக்கி சென்ற லாரியின் பின் சக்கரத்தில் மோதி டூவீலருடன் சிக்கி உடல் 5 கி.மீ. வரை இழுத்து செல்லப்பட்டது. லாரியில் உடல் சிக்கி இருப்பதை கண்ட சிலர் டூவீலரில் சென்று தகவல் தெரிவித்த பின்பு தான் டிரைவருக்கு தெரியவந்தது.
Similar News
News November 19, 2025
மதுரை மாவட்டம் – இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (18.11.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
மதுரை: கண்மாயில் மூழ்கி முதியவர் பலி.!

மேலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் அப்துல்காதர் (65). இவர் அப்பகுதியில் உள்ள உசிலம்பட்டி கண்மாயில் காலைக் கடனை கழிப்பதற்காக இன்று காலை சென்றுள்ளார். கண்மாயில் இறங்கிய போது இவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி அவர் பலியானார். உடலை மீட்டு மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 18, 2025
மதுரை: கண்மாயில் மூழ்கி முதியவர் பலி.!

மேலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் அப்துல்காதர் (65). இவர் அப்பகுதியில் உள்ள உசிலம்பட்டி கண்மாயில் காலைக் கடனை கழிப்பதற்காக இன்று காலை சென்றுள்ளார். கண்மாயில் இறங்கிய போது இவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி அவர் பலியானார். உடலை மீட்டு மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


