News March 25, 2025
மதுரை மக்களே கட்டாயம்! மிஸ் பண்ணிடாதீங்க

தமிழக அரசின் அறிவிப்பையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் எனவும் , கைரேகையை பதிவு செய்யாத குடும்ப அட்டைதார்கள் தங்களுடைய நியாய விலைக் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.உங்கள் தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.
Similar News
News January 9, 2026
மதுரை: பொங்கல் பரிசு வாங்க வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து

அவனியாபுரம் பெரியசாமி மனைவி ராக்கம்மாள்(25) காய்கறி கடையில் வேலை பார்த்தார். மனைவி மீது சந்தேகப்பட்டு கணவர் தகராறு செய்ய அதில் கோபித்து கொண்டு அம்மா வீட்டிற்கு மனைவி சென்று விட்டார். நேற்று செம்பூரணி ரோட்டில் உள்ள ரேசன் கடைக்கு பொங்கல் பரிசு வாங்க அவர் வர, அங்கு வந்து மனைவியை அழைத்து சென்று கத்தியால் சரமாரியாக குத்திய கணவரை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர்.
News January 9, 2026
மதுரை: 11ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்; ஒருவர் கைது

மதுரை, பெத்தானியாபுரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(26). இவர் +1 படிக்கும் மாணவியை கோச்சடையில் உள்ள கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்த திருப்பரங்குன்றம் மகளிர் நல அலுவலர் பத்மா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து பாலகிருஷ்ணனை நேற்று கைது செய்தனர்.
News January 8, 2026
மதுரையில் இறைச்சி விற்க தடை; மீறினால்..!

மதுரை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும், திருவள்ளுவர் தினமான ஜனவரி 16ம் தேதி ஆடு, மாடு, கோழி, மீன் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்தால் பொது சுகாதார சட்டப்படி சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. திருவள்ளுவர் தினத்தன்று இறைச்சி விற்க தடை செய்யப்பட்டுள்ளது.


