News March 25, 2025
மதுரை மக்களே கட்டாயம்! மிஸ் பண்ணிடாதீங்க

தமிழக அரசின் அறிவிப்பையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் எனவும் , கைரேகையை பதிவு செய்யாத குடும்ப அட்டைதார்கள் தங்களுடைய நியாய விலைக் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.உங்கள் தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.
Similar News
News December 23, 2025
மேலூர்: சாலை விபத்தில் ஒருவர் துடிதுடித்து பலி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சூரக்குண்டு முனிக்கோவில் அருகே 4 வழிச்சாலையில் இன்று (டிசம்பர் 23) அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் போலீசார். இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 23, 2025
மதுரை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

மதுரை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 23, 2025
மதுரை: லாரி பின் சக்கரத்தில் சிக்கி கொடூர பலி

கருங்காலக்குடி அருகே கச்சிராயன்பட்டியை சேர்ந்தவர் வீரணன்(70). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு மேலூர் மதுரை நான்கு வழிச்சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்த போது அம்பலகாரன்பட்டி பஸ் ஸ்டாப் எதிரே, பின்னால் வந்த லாரி மோதியது. இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் லாரி டிரைவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


