News August 16, 2024
மதுரை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே 31.12.2024 க்குள், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகங்களிலும் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
Similar News
News November 23, 2025
மதுரை: 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

மதுரை முடக்கத்தான் கோவிந்தராஜ் 40 எலக்ட்ரீசியன் இவருக்கும் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. மனைவி கோபித்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார், மனவேதனை அடைந்த கோபிராஜ் தனது 10 வயது 5 வயது மகள்களை கழுத்தை நெரித்து கொலை செய்தார், பின்னர் கோபிராஜ் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இரவு 8:30 மணிக்கு கூடல்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
News November 23, 2025
மதுரை: அரசு மருத்துவமனை-ல பிரச்சனையா..!

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா மதுரை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0452-2640778 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.
News November 23, 2025
மீனாட்சியம்மன் கோவிலில் பக்தர்களிடம் மோசடி

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நேற்று வந்த ஆந்திர பக்தர்கள் 39 பேரிடம், தன்னை கைடு என அறிமுகப்படுத்திக் கொண்ட மூவர் சிறப்பு தரிசனத்திற்கு அழைத்து செல்வதாக கூறி தலா ரூ.250 பெற்று ஏமாற்றி உள்ளனர். ரூ.50 கட்டணத்திற்கு அதிக பணம் வாங்கியது அறிந்த பக்தர்கள் வாக்குவாதம் செய்தனர். பின்னர் வெங்கடேஷ், அம்மையப்பன், கணேசன் ஆகிய மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி கைது செய்தனர்.


