News August 16, 2024
மதுரை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே 31.12.2024 க்குள், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகங்களிலும் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
Similar News
News January 9, 2026
மதுரை: பொங்கல் பரிசு வாங்க வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து

அவனியாபுரம் பெரியசாமி மனைவி ராக்கம்மாள்(25) காய்கறி கடையில் வேலை பார்த்தார். மனைவி மீது சந்தேகப்பட்டு கணவர் தகராறு செய்ய அதில் கோபித்து கொண்டு அம்மா வீட்டிற்கு மனைவி சென்று விட்டார். நேற்று செம்பூரணி ரோட்டில் உள்ள ரேசன் கடைக்கு பொங்கல் பரிசு வாங்க அவர் வர, அங்கு வந்து மனைவியை அழைத்து சென்று கத்தியால் சரமாரியாக குத்திய கணவரை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர்.
News January 9, 2026
மதுரை: 11ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்; ஒருவர் கைது

மதுரை, பெத்தானியாபுரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(26). இவர் +1 படிக்கும் மாணவியை கோச்சடையில் உள்ள கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்த திருப்பரங்குன்றம் மகளிர் நல அலுவலர் பத்மா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து பாலகிருஷ்ணனை நேற்று கைது செய்தனர்.
News January 8, 2026
மதுரையில் இறைச்சி விற்க தடை; மீறினால்..!

மதுரை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும், திருவள்ளுவர் தினமான ஜனவரி 16ம் தேதி ஆடு, மாடு, கோழி, மீன் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்தால் பொது சுகாதார சட்டப்படி சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. திருவள்ளுவர் தினத்தன்று இறைச்சி விற்க தடை செய்யப்பட்டுள்ளது.


