News August 16, 2024
மதுரை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே 31.12.2024 க்குள், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகங்களிலும் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
Similar News
News December 13, 2025
மதுரை: ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலி

சமயநல்லூர், சோழவந்தான் ரயில் நிலையத்திற்கு இடையே சமயநல்லூர் மேம்பாலத்திற்கு கீழ் உள்ள தண்டவாளத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு நேற்று இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து மதுரை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் ? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
News December 13, 2025
மதுரை மக்களுக்கு புதிய APP அறிமுகம்

மதுரை மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் புகார்களை பதிவிடும் “ஸ்மார்ட் மதுரை” செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உங்க பகுதியில் உள்ள குடிநீர், தெரு விளக்குகள், திடக்கழிவு மேலாண்மை, சாலை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் இதன் மூலம் இனிமேல் எளிதாகப் புகாரளிக்கலாம். உடனடி தீர்வும் வழங்கப்ப்டும். இங்கு <
News December 13, 2025
மதுரை: போலி ஆவண தயாரிப்பில் குற்றவாளியாக அறிவிப்பு

மதுரை திருப்பாலையை சேர்ந்த சண்முகநாதனுக்கு சொந்தமான காலிமனையை போலி ஆவணம் தயாரித்து, வாடிப்பட்டியை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடிய நிலையில் தலைமறைவானார். மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் அவரை
தேடப்படும் குற்றவாளியாக இன்று அறிவித்தது.


