News April 1, 2025
பிரதமர் வருகை – மீன் பிடிக்க தடை

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்.6ல் திறந்து வைக்க உள்ளார். இதன் பாதுகாப்பு கருதி மண்டபம் விசைப் படகுகள், நாட்டுப் படகுகளுக்கு ஏப். 4, 5, 6ல் மீன்பிடி அனுமதி சீட்டு நிறுத்த கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தல் படி 3 நாட்களுக்கு மீன் பிடி அனுமதிச்சீட்டு நிறுத்தப்படுகிறது. இவ்வாறு மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 7, 2026
இராமநாதபுரம்: புயல் எச்சரிக்கை அறிவிப்பு

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
News January 7, 2026
ராம்நாடு: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY..!

ராமநாதபுரம் மக்களே, நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு<
News January 7, 2026
ராம்நாடு: ஓடும் பஸ்ஸில் நகை திருடிய பெண்கள்

கமுதிக்கு சென்ற தனியார் பஸ்ஸில் வழிமறிச்சான் கிராமத்தில் அன்னமயில் (55) என்ற பெண் ஏறினார். பஸ்சில் பயணம் செய்த இராமநாதபுரம் குயவன்குடியைச் சேர்ந்த ஈஸ்வரி (35), செல்வி (38) செய்யாமங்கலம் அருகே பஸ் வந்தபோது அன்னமயில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினை திருடிவிட்டு விரதக்குளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கினர்.தகவலறிந்த முதுகுளத்தூர் காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


