News October 23, 2024

நாகை எஸ்.பி தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம்

image

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு குறைகள் தொடர்பாக 9 மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க சரக போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Similar News

News December 12, 2025

நாகை: வகுப்பறையை திறந்து வைத்த அமைச்சர்

image

நாகை மாவட்டம் விழுந்தமாவடி ஊராட்சி தென்பாதி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், புதிதாக இரண்டு வகுப்பறை கட்டப்பட்டுள்ளது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ருதி உடன் இருந்தார்.

News December 12, 2025

நாகை: திட்ட இயக்குனர் ஆய்வு

image

நாகை மாவட்டம் நீர்முளை சுற்றுவட்டார பலுதிகளில் வளர்ச்சித் திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கே.சுருதி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில், ஊரக பகுதிகளில் நடைபெற்றுவரும் கட்டிட பணிகள், அரசு நர்சரி, மரக்கன்றுகள் நடும் பணி போன்றவற்றை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.

News December 12, 2025

நாகை: புதுமாப்பிள்ளைக்கு அரிவாள் வெட்டு!

image

கர்நாடகவை சேர்ந்தவர் டேனியல்( 49) நேற்று முன்தினம் குடும்பதோடு வேளாங்கண்ணிக்கு வந்தனர். மேலும் தனது மகள் ராகுல் காதலித்த பெண்ணையும் அழைத்து வந்து திருமணம் செய்து வைத்தனர். இதையறிந்த பெண் குடும்பத்தினர் வேளாங்கண்ணியில் தங்கி இருந்த ராகுல் உட்பட 4 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு பெண்ணை கூட்டி சென்றனர். இதையடுத்து 4 பேரும் சிகிசிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!