News October 23, 2024
நாகை எஸ்.பி தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம்

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு குறைகள் தொடர்பாக 9 மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க சரக போலீசாருக்கு உத்தரவிட்டார்.
Similar News
News February 23, 2026
நாகை: கோயில் உண்டியல் திருட்டு – இளைஞர் கைது

வேதாரண்யம் பகுதிகளானா ஆதனூர், கருப்பம்புலம், வாய்மேடு உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த ஓராண்டாக கோயில் உண்டியல்கள் திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், திருத்துறைபூண்டி பகுதியை சேர்ந்த இளைஞர் கவிதன்(32) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் தொடர்ந்து கோயில்களில் திருடியது தெரியவந்தது. இதனையெடுத்து இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
News February 23, 2026
நாகை: கஞ்சா விற்பனை – போலீசார் அதிரடி

வேதாரண்யம் காவல் சரகத்திற்கு உட்பட்ட சர்வ கட்டளை பகுதியில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த 3 பேரில் 2 பேர் போலீசை பார்த்தவுடன் தப்பி ஓடியுள்ளனர். ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர், அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பதும் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.
News February 23, 2026
நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (பிப்.22) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.23) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


