News October 23, 2024
நாகை எஸ்.பி தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம்

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு குறைகள் தொடர்பாக 9 மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க சரக போலீசாருக்கு உத்தரவிட்டார்.
Similar News
News December 19, 2025
நாகையில் வாகன ஏலம் அறிவிப்பு – போலீஸ்

நாகை மாவட்ட போலீசாரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர், கார், ஆட்டோ உள்ளிட்ட 43 வாகனங்கள் மற்றும் ஒரு படகு ஆகியவை வரும் டிச.23-ந்தேதி, காலை 10 மணிக்கு நாகை ஆயுத படை மைதானத்தில் எஸ்.பி முன்னிலையில் பொது ஏலம் விடப்பட உள்ளது. இதனை ஏலம் எடுக்க விரும்புவோர் ஆதார் அட்டையுடன் நேரில் பங்கேற்று ஏலம் கேட்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 19, 2025
நாகூர் ஹனிபா நூற்றாண்டு விழா அறிவிப்பு

இசைமுரசு நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழா வரும் டிச.20-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10:30 மணிக்கு, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் எம்.பி, எம்எல்ஏ, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். எனவே இந்நிகழ்வில் நாகை மாவட்ட மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News December 19, 2025
நாகூர் ஹனிபா நூற்றாண்டு விழா அறிவிப்பு

இசைமுரசு நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழா வரும் டிச.20-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10:30 மணிக்கு, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் எம்.பி, எம்எல்ஏ, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். எனவே இந்நிகழ்வில் நாகை மாவட்ட மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


