News October 23, 2024

நாகை எஸ்.பி தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம்

image

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு குறைகள் தொடர்பாக 9 மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க சரக போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Similar News

News December 5, 2025

நாகை: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு …

image

நாகை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில்<> eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News December 5, 2025

நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் இருந்து ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவர்கள், 50 கன்னியாஸ்திரிகளுக்கு ECS முறையில் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News December 5, 2025

நாகை மாவட்ட மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

image

நாகை மாவட்டத்தில் சப்தவிடங்க தலங்களுக்கு ஒருநாள் பாரம்பரிய சுற்றுலா வருகின்ற டிசம்பர் 7ம் தேதி காலை 5:30 மணி அளவில் அழைத்து செல்லப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி நாகை மாவட்டத்தில் உள்ள ஏழு திருத்தலங்களுக்கு சென்று வர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 8943827941 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு நாகை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!