News August 17, 2024
சிவகாசி அருகே முதியவர் வெட்டி கொலை

சிவகாசி அருகே எரிச்சநத்தம் -அழகாபுரி சாலையில் உள்ள தனியார் மினரல் வாட்டர் நிறுவன இரவு நேர காவலாளியாக பணியாற்றி வருபவர் குமிழங்குளத்தை சேர்ந்த சௌந்தரராஜன்(84). இன்று அதிகாலை மர்ம நபர்கள் இவரை வெட்டி கொலை செய்து அவர் அணிந்திருந்த நாலரை பவுன் தங்கச் செயின், மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர். இக்கொடூர சம்பவம் குறித்து, எம்.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
Similar News
News December 18, 2025
விருதுநகர்: காணமல் போனவர் சடலமாக மீட்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி கிழக்கு தெருவில் வசித்து வந்தவர் நம்பியார். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக வீட்டில் இருந்து சென்றவர் பின் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மாங்குளம் கண்மாயில் அவர் இறந்து கிடப்பதாக இன்று தகவல் வந்த நிலையில் தற்போது அவரது உடலை கைபற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு பரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
News December 18, 2025
விருதுநகர்: வாக்காளர் அட்டை வேணுமா – APPLY!

விருதுநகர் மக்களே SIR- 2025 பார்ம் பணிகள் முடிவடைந்து, புது வாக்காளர்கள் பதிவு செய்யும் பணி துவங்கி உள்ளது. உங்க போன் -ல விண்ணப்பிக்க வழி இருக்கு.
1. <
2. Voter Registration பிரிவில் Form 6-யை தேர்ந்தெடுங்க
3. புகைப்படம் மற்றும் அடையாள சான்றுகள் பதிவிட்டு விண்ணப்பியுங்க
4. 15 நாட்களில் புது ஓட்டர் ஐடி வந்துவிடும்அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 18, 2025
முன்னாள் ராணுவ வீரருக்கு 20 ஆண்டுகள் சிறை

சாத்தூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஆசைபாண்டி(67). முன்னாள் ராணுவ வீரர் இவர் அதே பகுதியில் பாட்டில் பராமரிப்பில் வசித்து வந்த 10 வயது சிறுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, பாலியல் தொல்லை அளித்ததாக 2023-ம் ஆண்டு போக்சோ வழக்கு பதிவு செய்தனர். இதில் குற்றவாளி ஆசைபாண்டிக்கு தாக்குதல் நடத்திய பிரிவில் 10 ஆண்டுகள், போக்சோ பிரிவில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


