News August 17, 2024

சிவகாசி அருகே முதியவர் வெட்டி கொலை

image

சிவகாசி அருகே எரிச்சநத்தம் -அழகாபுரி சாலையில் உள்ள தனியார் மினரல் வாட்டர் நிறுவன இரவு நேர காவலாளியாக பணியாற்றி வருபவர் குமிழங்குளத்தை சேர்ந்த சௌந்தரராஜன்(84). இன்று அதிகாலை மர்ம நபர்கள் இவரை வெட்டி கொலை செய்து அவர் அணிந்திருந்த நாலரை பவுன் தங்கச் செயின், மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர். இக்கொடூர சம்பவம் குறித்து, எம்.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Similar News

News January 9, 2026

விருதுநகர்: தேர்வு இல்லாமல் ARMY வேலை.. உடனே APPLY..

image

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். BE., B.tech ல் ஏதேனும் ஒரு பிரிவில் பயின்றவர்கள் 05.02.2026 க்குள் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும். முக்கியமாக இதற்கு தேர்வு கிடையாது. மதிப்பெண் மற்றும் நேர்காணல் மூலம் பணி வழங்கப்படும். SHARE IT…

News January 9, 2026

விருதுநகர்: வீட்டை உடைத்து லட்ச கணக்கில் நகை திருட்டு.!

image

அருப்புக்கோட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் ஜெயபால்(41). இந்நிலையில் ஜெயபால் கடந்த 7 ம் தேதி வீட்டை பூட்டி விட்டு திருச்செந்தூர் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் நேற்று ஜன‌.8 மாலை வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே லாக்கரிலிருந்து 14.1/2 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து டவுன் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 9, 2026

விருதுநகர்: G Pay / PhonePe பயன்படுத்துகிறீர்களா?

image

விருதுநகர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!