News April 2, 2025
சதுரகிரி அனுமதி குறித்து ஆலோசிக்க வனத்துறைத் திட்டம்

சுந்தரபாண்டியத்தை சேர்ந்த சடையாண்டி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில்,சதுரகிரிக்கு தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை வனத்துறை சோதனை சாவடி வழியாக பக்தர்களை அனுமதிக்கவும், இரவில் மலையில் தங்கினால் அவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை அமல்படுத்தி தினமும் பக்தர்களை அனுமதிக்கலாமா அல்லது மேல்முறையீடு செய்யலாமா என வனத்துறை யோசித்து வருகிறது.
Similar News
News December 4, 2025
விருதுநகர்: கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. பலருக்கும் அது எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக வீடுகள் வழங்கப்படும். இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் இங்கு <
News December 4, 2025
விருதுநகர்:அரசு பஸ்ஸில் சில்வர் டம்ளரில் மது அருந்திய டிரைவர்

ராஜபாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு செல்லும் அரசு பஸ், நேற்று முன்தினம் இரவு புது பஸ் ஸ்டாண்ட் வந்தது. பஸ் டிரைவர் பாலமுருகன், எவர் சில்வர் டம்ளரில் ஊற்றி, காபி போல பிறர் நினைத்துக் கொள்வர் என கருதி, மது அருந்திக் கொண்டிருந்தார். இதை கவணித்த பயணியர், டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பஸ்சில் இருந்து இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் மாற்று டிரைவர் மூலம் ஏற்பாடு செய்தனர்.
News December 4, 2025
ஸ்ரீவி., ஆடுகள் திருட்டு; சென்னை போலீசுக்கு தொடர்பா

ஸ்ரீவி., அருகே கொளுஞ்சிபட்டியில் நவ.,13ல் ராஜகோபால் என்பவரின் 5 ஆடுகள், நத்தம்பட்டி லட்சுமிபுரத்தில் ராமர் என்பவரின் 2 ஆடுகள் திருடு போயின. இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் நிலையூர் பிரசாத் 24, ஸ்ரீவி., முத்து 28, ஆகிய இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவத்தில் மதுரையை சேர்ந்த இருவர், சென்னையில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக பிடிப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.


