News August 25, 2024
குடும்பத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதால் வெட்டிக் கொலை

பனங்கால முக்கு பகுதியை சேர்ந்த சூர்யா, அவரது தம்பி ஆனந்த் ஆகிய இருவரும் மரம் வெட்டும் வேலை செய்து வந்தனர். மதுபோதையில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆனந்த் நேற்று சூர்யாவை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதைத் தொடர்ந்து ஆனந்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் சூர்யா குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியதால் அவரை கொலை செய்ததாக ஆனந்த் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.
Similar News
News December 8, 2025
குமரியில் 820 பேர் கைது!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று தக்கலை, அருமனை, திங்கள் நகர், மார்த்தாண்டம் உள்ளிட்ட 14 இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஓட்டத்தில் கலந்து கொண்ட 120 பெண்கள் உட்பட 820 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை ஒட்டி ஆர்ப்பாட்டம் நடந்த பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
News December 8, 2025
குமரி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை பண்ணுங்க!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க
News December 8, 2025
குமரி: லாரி மோதி இளைஞர் பலி!

மணவாளக்குறிச்சி நடுவூர்கரை பகுதி லாரி டிரைவர் சதீஷ்குமார்(40). இவர் நேற்று (டிச.7) மாலை லாரியில் பொருட்களுடன் குளச்சலில் இருந்து நாகர்கோவில் நோக்கி செல்லும்போது தெக்குறிச்சி சேதுபதி (24) பைக்கில் ஆலன்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். திடீரென பைக் மீது லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்ட சேதுபதி சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


