News January 1, 2025
காவல்துறை நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்

அரவக்குறிச்சி தாராபுரம் பள்ளபட்டி சாலையில் அரவக்குறிச்சி காவல்துறையினர் கேக் வெட்டி புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர். அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் கோபி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். பொதுமக்கள் ஒரு சிலரும் உடனிருந்தனர். உற்சாகம் அடைந்த அவர்கள் கேக்குகளை முகத்தில் பூசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆடிப்பாடி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.
Similar News
News November 15, 2025
கரூரில் பெண் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுமருதூரை சேர்ந்தவர் முரளி மனைவி சுதா 26. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது அருகில் குடியிருக்கும் கோமதி, மகாலட்சுமி, முருகானந்தம், அம்சவல்லி ஆகிய 4 பேரும் எச்சில் துப்பி தகாத வார்த்தையால் திட்டி கையால் அடித்ததாக சுதா அளித்த புகாரின் பேரில் 4 பேர் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசரணை
News November 15, 2025
கரூர்: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

கரூர் மாவட்டம், இன்று (15.11.2025 ) அரவக்குறிச்சி தொகுதி, புன்னம் சத்திரம், அன்னை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு சிறப்பு மருத்துவ பரிசோதனைகளை இலகுவாக சோதித்துக் கொள்ளும் வகையிலான, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ பரிசோதனை முகாமநடைபெறுகிறது. இதில் நரம்பு, இதயம், கை, கால் போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News November 14, 2025
மாற்றுத்திறத்திறனாளிகளுக்கு ஓவிய போட்டி

கரூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவில் ஓவியப் போட்டிகள் நடைபெறுகிறது மேலும் (http://q.me-qr.com/mk9ORAPC) இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கவும். மேலும் 20.11.2025 அன்று நாரத கான சபா, திருமண மண்டபத்தில் உழவர் சந்தை அருகில், நடை பெற இருக்கிறது என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தகவல் அளித்துள்ளார்.


