News January 1, 2025
காவல்துறை நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்

அரவக்குறிச்சி தாராபுரம் பள்ளபட்டி சாலையில் அரவக்குறிச்சி காவல்துறையினர் கேக் வெட்டி புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர். அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் கோபி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். பொதுமக்கள் ஒரு சிலரும் உடனிருந்தனர். உற்சாகம் அடைந்த அவர்கள் கேக்குகளை முகத்தில் பூசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆடிப்பாடி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.
Similar News
News December 20, 2025
கரூரில் யார் அதிகம் தெரியுமா?

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில் மொத்தம் 8,18,672 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,94,044 பெண் வாக்காளர்கள் 4,24,546 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 82 பேர் உள்ளனர். கரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 79,690 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 20, 2025
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூர் மாவட்டத்தில் டிராகன் பழம் பயிரிடப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம், டிராகன் பழம் சாகுபடி செய்ய ஹெக்டருக்கு, ரூ.1.62 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் (அ ) மேலும் விபரங்களுக்கு https://tnhorticulture.tn.gov.in/tnhortnet/ இணைய தளத்தில் காணலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தார்.
News December 19, 2025
BREAKING: கரூரில் 79,690 பெயர்கள் நீக்கம்

கரூர் மாவட்டத்தில் இன்று (டிசம்பர்.19) வரைவு வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
1) எஸ்ஐஆரு-க்கு முன்- 8,98,362
2) எஸ்ஐஆரு-க்கு பின்- 8,18,672
இதில் இறந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள், இரட்டை பதிவுகள், குடிபெயர்ந்தோர் என, (மொத்தம்- 79,690) பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.


