News January 23, 2025
காட்பாடி ரயிலில் வந்த 1209 டன் யூரியா மூட்டைகள்

மங்களூருவில் இருந்து 1209 டன் யூரியா, 127 டன் பொட்டாசியம் ஆகியவை இன்று (ஜனவரி 23) காட்பாடிக்கு ரயிலில் வந்தது. இவற்றை தர கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் முருகன் முன்னிலையில் வேலூருக்கு 750 டன் யூரியா, ராணிப்பேட்டைக்கு 100 டன், திருப்பத்தூருக்கு 75 டன் யூரியா, காஞ்சிபுரத்திற்கு 100 டன் யூரியா, செங்கல்பட்டிற்கு 25 டன் யூரியா, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 200 டன் யூரியா பிரித்து அனுப்பப்பட்டது.
Similar News
News November 4, 2025
வேலூரில் லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேர் கைது

பாகாயம் காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான போலீசார் நேற்று (நவ.03) விருபாட்சிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் ஆந்திர சேர்ந்த சிட்டிபாபு (52), பாலகுமார் (55), சரவணன் (54) மற்றும் வெட்டுவாணத்தைச் சேர்ந்த வேல்முருகன் (52), கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரை போலீசார் வழக்கின் பெயரில் கைது செய்தனர்.
News November 4, 2025
வேலூரில் ரூ.414 கோடி நலத்திட்ட உதவிகள்!

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை (நவ.04) வேலூர் மாவட்டத்தில் 11.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 31 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். மேலும் 17.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதை தொடர்ந்து 49,021 பயனாளிகளுக்கு 414.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News November 4, 2025
வேலூர் துணை முதல்வரை வரவேற்ற கலெக்டர்

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று (நவம்பர் 3) வேலூருக்கு வருகை புரிந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஆட்சியர் சுப்புலட்சுமி மாவட்ட எல்லையான பிள்ளையார் குப்பத்தில் புத்தகம் கொடுத்து வரவேற்றார். இதில் எஸ்பி மயில்வாகனன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


