News August 14, 2024
ஆரணி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை

ஆரணி அடுத்த நெசல் கூட்டுசாலையில் விழுந்த மரத்தில் மோதி சிவா என்பவர் திங்கள் அன்று உயிரிழந்தார். விபத்திற்கு அதிகாரிகளே காரணம் என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் ஆணைக்கிணங்க, ஆரணி உதவிக் கோட்டப் பொறியாளர் சந்திரசேகர் பணியிட மாற்றம், இளநிலைப் பொறியாளர் செந்தில்குமார், சாலை ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News December 22, 2025
தி.மலை: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

திருவண்ணாமலை மக்களே.., அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. SHARE பண்ணுங்க.
News December 22, 2025
தி.மலை வாக்காளர்களுக்கு சூப்பர் UPDATE!

தி.மலை மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
News December 22, 2025
தி.மலை: லாரி டிரைவர் மயங்கி விழுந்து பலி!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (60) இவர் நேற்று முன்தினம் திருப்பூரில் இருந்து துணி பண்டல்களை எடுத்துக்கொண்டு, சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில், வந்தவாசி அருகே லாரியை நிறுத்திவிட்டு சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து வந்தவாசி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.


