News August 14, 2024

ஆரணி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை

image

ஆரணி அடுத்த நெசல் கூட்டுசாலையில் விழுந்த மரத்தில் மோதி சிவா என்பவர் திங்கள் அன்று உயிரிழந்தார். விபத்திற்கு அதிகாரிகளே காரணம் என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் ஆணைக்கிணங்க, ஆரணி உதவிக் கோட்டப் பொறியாளர் சந்திரசேகர் பணியிட மாற்றம், இளநிலைப் பொறியாளர் செந்தில்குமார், சாலை ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News January 1, 2026

தி.மலை மாவட்டத்தில் இன்று இது இயங்காது!

image

தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தால் நடத்தப்படும் இ – சேவை மற்றும் ஆதார் மையங்கள் இன்று (ஜனவரி 1) செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர தணிக்கை மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2ஆம் தேதி முதல் இ – சேவை மையங்கள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 1, 2026

தி.மலைக்கு இன்று மழை எச்சரிக்கை!

image

இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையின் ஒரு சில பகுதியில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று தி.மலையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழையா என கமெண்டில் சொல்லுங்க.

News January 1, 2026

தி.மலை: டிரைவர் மீது கொலைவெறி தாக்குதல்!

image

கலசப்பாக்கம், ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் இருந்து தி.மலைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சாமிக்கண்ணு என்ற ஓட்டுநர் பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். சீராம்பாளையம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, கோதண்டம், முருகன் மற்றும் பழனிசாமி ஆகிய மூவரும் பேருந்தை ஏன் முன்கூட்டியே எடுத்தீர்கள் என கூறி ஓட்டுநரை தாக்கியதாக கூறப்படுகிறது. மூவரையும் கைது செய்த போலீசார் இது குறித்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!