News August 14, 2024

ஆரணி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை

image

ஆரணி அடுத்த நெசல் கூட்டுசாலையில் விழுந்த மரத்தில் மோதி சிவா என்பவர் திங்கள் அன்று உயிரிழந்தார். விபத்திற்கு அதிகாரிகளே காரணம் என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் ஆணைக்கிணங்க, ஆரணி உதவிக் கோட்டப் பொறியாளர் சந்திரசேகர் பணியிட மாற்றம், இளநிலைப் பொறியாளர் செந்தில்குமார், சாலை ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News October 15, 2025

தி.மலை சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை

image

திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் எண் 2-ல், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஹேமமாலினி மற்றும் அருள்பிரசாத் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் இன்று (அக்.15) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

News October 15, 2025

தி.மலை மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில்!

image

தி.மலை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிக்கூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <>TN Smart <<>>என்ற இணையதளத்தின் மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். *மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!*

News October 15, 2025

தி.மலை: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

image

தி.மலை மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!