News August 14, 2024
ஆரணி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை

ஆரணி அடுத்த நெசல் கூட்டுசாலையில் விழுந்த மரத்தில் மோதி சிவா என்பவர் திங்கள் அன்று உயிரிழந்தார். விபத்திற்கு அதிகாரிகளே காரணம் என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் ஆணைக்கிணங்க, ஆரணி உதவிக் கோட்டப் பொறியாளர் சந்திரசேகர் பணியிட மாற்றம், இளநிலைப் பொறியாளர் செந்தில்குமார், சாலை ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News December 19, 2025
தி.மலை: திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

தி.மலை, தமிழ்நாடு முதல்வர் கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டங்களை திறந்து வைக்கவும் மற்றும் அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வரும் டிச.27, 28ஆம் தேதிகளில் வருகை முன்னிட்டு, வரவேற்பு நிகழ்ச்சி குறித்து திமுக பகுதி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவர் மருத்துவர். எ.வ.வே.கம்பன் இன்று (டிச.19) ஆலோசனைகளை வழங்கினார். இதில், திமுக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
News December 19, 2025
JUST IN: தி.மலை 2.51 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

தி.மலை மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளின் முடிவில் 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2,51,162 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர்.க்கு முன் 21,21,902 வாக்காளர்கள் இருந்த நிலையில், பின்னர் 18,70,740 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் 11.84 சதவீத வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
News December 19, 2025
தி.மலை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- DON’T MISS!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தி.மலை மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு க்ளிக் செய்து அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்கள் புதுமணதம்பதிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு SHARE பண்ணுங்க.


