News August 14, 2024

ஆரணி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை

image

ஆரணி அடுத்த நெசல் கூட்டுசாலையில் விழுந்த மரத்தில் மோதி சிவா என்பவர் திங்கள் அன்று உயிரிழந்தார். விபத்திற்கு அதிகாரிகளே காரணம் என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் ஆணைக்கிணங்க, ஆரணி உதவிக் கோட்டப் பொறியாளர் சந்திரசேகர் பணியிட மாற்றம், இளநிலைப் பொறியாளர் செந்தில்குமார், சாலை ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News December 4, 2025

தி.மலை: EB பிரச்சனையா..? உடனே CALL!

image

தி.மலை மாவட்ட மக்களே.., அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “<>TNEB Mobile App<<>>” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 4, 2025

தி.மலை கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

தி.மலை மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
▶️பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
▶️இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
▶️ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் (ம) ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE

News December 4, 2025

தி.மலையில் கனமழை.. நூலிழையில் உயிர் தப்பிய நபர்

image

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் கல்பட்டி கிராமம் பாப்பம்பாடி தெருவில் வசிக்கும் சதிஷ் குமார் என்பவரின் ஓட்டு வீடானது, தொடர் மழையின் காரணமாக நேற்று (டிச.03) மேற்கூரை சரிந்து விழுந்தது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் கிழே விழுந்து சேதம் அடைந்தது. இச்சம்வத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

error: Content is protected !!