News August 14, 2024
ஆரணி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை

ஆரணி அடுத்த நெசல் கூட்டுசாலையில் விழுந்த மரத்தில் மோதி சிவா என்பவர் திங்கள் அன்று உயிரிழந்தார். விபத்திற்கு அதிகாரிகளே காரணம் என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் ஆணைக்கிணங்க, ஆரணி உதவிக் கோட்டப் பொறியாளர் சந்திரசேகர் பணியிட மாற்றம், இளநிலைப் பொறியாளர் செந்தில்குமார், சாலை ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News December 23, 2025
தி.மலை: மச்சான் கழுத்தை அறுத்த அக்கா கணவன்!

செ.ஆண்டாப்பட்டு, எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரமணகிரி(24). இவர், தனலட்சுமி(20) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், ரமணகிரியும், தனலட்சுமியின் தம்பி குபேந்திரனும்(19) நேற்று முன் தினம் இரவு மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் குபேந்திரனின் கழுத்தை ரமணகிரி பிளேடால் அறுத்தார். இதில் படுகாயமடைந்த குபேரன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ரமணகிரியை போலீசார் கைது செய்தனர்.
News December 23, 2025
தி.மலை: மச்சான் கழுத்தை அறுத்த அக்கா கணவன்!

செ.ஆண்டாப்பட்டு, எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரமணகிரி(24). இவர், தனலட்சுமி(20) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், ரமணகிரியும், தனலட்சுமியின் தம்பி குபேந்திரனும்(19) நேற்று முன் தினம் இரவு மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் குபேந்திரனின் கழுத்தை ரமணகிரி பிளேடால் அறுத்தார். இதில் படுகாயமடைந்த குபேரன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ரமணகிரியை போலீசார் கைது செய்தனர்.
News December 23, 2025
தி.மலை: மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி!

கலசபாக்கம்: பத்தியவாடி, புதிய காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ்(48). கூலித் தொழிலாளியான இவர், நேற்று(டிச.22) குளத்து மேடு அருகே உள்ள தெருவிளக்கை பழுது செய்தபோது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். இதனால் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


