News February 16, 2025

அமராவதி ஆற்றில் முதலைகள் நடமாட்டம்

image

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் இருந்து மூலனூர் செல்லும் சாலையில் புதுப்பை அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் யாரும் கரையோர பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் குளிக்கவும் துணி துவைக்கவும் புதுப்பை அமராவதி ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News October 20, 2025

திருப்பூரில் நிலம் வாங்க போறிங்களா?

image

1.நிலம் வாங்கும் முன், அது பட்டா நிலமா (அ) புறம்போக்கு நிலமா என அறிய வேண்டும்., 2.அதன் விலை நிலவரம் மற்றும் கோயில் நிலமா என்பதை விஏஓ மூலம் உறுதி செய்ய வேண்டும், 3.மேலும், பழைய/தற்போதைய உரிமையாளர்கள், தாய் பத்திரம், கடன் போன்ற ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம், 4.பட்டாவுடன் ஆதார் இணைக்க, <>இங்கே கிளிக் <<>>செய்து ‘Aadhaar Linking for Patta’ பகுதியில் விவரங்களை உள்ளிட்டு OTP மூலம் உறுதிசெய்து இணைக்கலாம்.

News October 20, 2025

திருப்பூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்? தீவிர சோதனை

image

உடுமலை அருகே, தமிழக – கேரளா எல்லையில் கால்நடைத்துறையினர், ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்கும் வகையில் சோதனை மேற்கொண்டு வருவதோடு, வனப்பகுதியிலுள்ள காட்டுப்பன்றிகள் திடீரென இறந்தால் தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தடுப்பு பணியை, சென்னை கால்நடை நோய் நிகழ்வியல் பிரிவு உதவி இயக்குனர் அகிலன் ஆய்வு மேற்கொண்டார்.

News October 19, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக அவிநாசி பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கயம், வெள்ளகோவில், தாராபுரம், ஊதியூர் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 19.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும்.

error: Content is protected !!