News February 16, 2025
அமராவதி ஆற்றில் முதலைகள் நடமாட்டம்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் இருந்து மூலனூர் செல்லும் சாலையில் புதுப்பை அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் யாரும் கரையோர பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் குளிக்கவும் துணி துவைக்கவும் புதுப்பை அமராவதி ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News December 12, 2025
திருப்பூர் : கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

திருப்பூர் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYCஐ உருவாக்குங்க. SHARE!
News December 12, 2025
திருப்பூர்: வாக்காளர்களே! SIR UPDATE

திருப்பூர் மக்களே தற்போது ECI சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுள்ளது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT
News December 12, 2025
திருப்பூரில் 3.60 லட்சம் பேருக்கு ஓட்டு இல்லையா?

திருப்பூர், வடக்கு, தெற்கு, பல்லடம் தொகுதிகளில் வசிக்கும் வெளிமாவட்ட பனியன் தொழிலாளர் ஏராளமானோர், சொந்த ஊர் ஓட்டுரிமையே போதும் என்கிற அடிப்படையில், திருப்பூரில் கணக்கீட்டு படிவம் சமர்ப்பிக்காமல் உள்ளனர். அந்தவகையில், எட்டு சட்டசபை தொகுதிக்கான பட்டியலில் இருந்து, 15 சதவீத வாக்காளர்கள், அதாவது, 3.60 லட்சம் பேருக்கு மேல் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது.


