News March 14, 2025

அகழ்வாராய்ச்சிக்கு ₹7 கோடி ஒதுக்கீடு

image

சிவகங்கை, சேலம், கோவை, கள்ளக்குறிச்சி, கடலூர், தென்காசி, தூத்துக்குடி, நாகை என 8 மாவட்டங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி நடைபெறும் என பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதற்காக ₹7 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஓலைச்சுவடி கையெழுத்து பிரதிகளை மின்பதிப்பாக மாற்ற ₹2 கோடி, 500 இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் பதிப்பிட ₹10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 14, 2025

RSS, பாஜகவை மன்னிக்க மாட்டேன்: காந்தி பேரன்

image

RSS, பாஜகவை மன்னிக்க மாட்டேன், சொன்ன கருத்துக்களையும் திரும்ப பெற மாட்டேன் என காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார். RSS- பாஜக உள்நாட்டு எதிரிகள், துரோகிகள், ஆபத்தானவர்கள் என துஷார் விமர்சித்து இருந்தார். மேலும், அவர்களை எதிர்ப்பது விடுதலை போராட்டத்தை விட முக்கியமானது என கூறியிருந்தார். இந்த கருத்துகளுக்காக துஷாரைக் கைது செய்ய பாஜக வலியுறுத்தியிருந்தது.

News March 14, 2025

540 கோடி VIEWS… ஹாட்ஸ்டாரில் சாம்பியன்ஸ் டிராபி சூப்பர் ஹிட்

image

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை உலகம் முழுவதும் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் மொத்தம் 540 கோடி பேர் பார்த்துள்ளனர். குறிப்பாக, பைனலில் இந்தியா, நியூசிலாந்து மோதிய போட்டியை 124.2 கோடி பேர் பார்த்துள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் போட்டியை 60.2 கோடி, இந்தியா, ஆஸி. போட்டியை 66.9 கோடி பேர் பார்த்துள்ளனர். இந்திய விளையாட்டுப் போட்டிகள் லைவில் இதுவொரு புதிய சாதனையாகக் கருதப்படுகிறது.

News March 14, 2025

மனைவியிடம் சில்மிஷம்: கணவன் தந்த தண்டனை

image

உ.பி.,யைச் சேர்ந்த சதீஷின் (45) மனைவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பெண் அருகில் இருந்த கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஊழியராக இருந்த தர்மேந்திர மாவி, அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். இதை அப்பெண் கணவனிடம் கூற, அவர் உறவினர்களுடன் சென்று மாவியின் ஆணுறுப்பை கத்தியால் வெட்டியுள்ளார். இது சரியான தண்டனை என்கின்றனர் நெட்டிசன்கள். நீங்க என்ன சொல்றீங்க?

error: Content is protected !!