News March 24, 2025
விவசாயிகளுக்கு ₹6,000: மார்ச் 31க்குள் விண்ணப்பிக்கவும்

விவசாயிகள் அடையாள எண் பெற மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. விவசாயிகள் தனி அடையாள எண் பெறாவிட்டால், மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் ₹6,000 பெற முடியாது என கூறியுள்ளது. ஏற்கெனவே, PM கிசான் திட்டத்தில் இப்போது இணைந்தாலும், உதவித் தொகை வழங்கப்படும் என்றும், தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்குமாறும் மத்திய அரசும் அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 26, 2025
அதிமுக கூட்டணியில் யார் யார்?

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக பார்முலாவை பின்பற்ற அதிமுக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுக 170+, NDA 64 இடங்களில் போட்டியிட அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது. இதில், BJP, DMDK, PMKவுக்கு இரட்டை இலக்கத்திலும், தமாகா, புதிய தமிழகம், புரட்சி பாரதம், தமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒற்றை இலக்கத்திலும் சீட் கொடுக்கப்படலாம். சூழலை பொறுத்து, TTV கூட்டணியில் இணையக்கூடும்.
News March 26, 2025
இன்று RR vs KKR மோதல்! முதல் வெற்றிக்கான பலப்பரிட்சை

IPLல் இன்று RR – KKR அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில், KKR RCBயிடம் 7 விக்கெட் வித்தியாசத்திலும், RR 44 ரன்கள் வித்தியாசத்தில் SRHயிடமும் தோல்வி அடைந்தன. இதனால், 2 அணிகளும் முதல் வெற்றியை குறிவைத்துள்ளன. போட்டி நடக்கும் கவுகாத்தி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது. மேலும், 2 அணியும் சரிசம பலத்துடன் இருப்பதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. இன்று யார் வெற்றி பெறுவார்கள் என நினைக்கிறீர்கள்?
News March 26, 2025
சர்ச்சைக்குரிய தீர்ப்பு: மேல் விசாரணைக்கு எடுத்த SC

பெண்ணின் மார்பைப் பிடிப்பதோ, ஆடையை கிழிப்பதோ பாலியல் வன்கொடுமை அல்ல என சிறார் பாலியல் தாக்குதல் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் எனவும் கோரியிருந்தனர். இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக, தாமாக முன் வந்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.