News March 14, 2025
கிராமச் சாலைகளை மேம்படுத்த ₹2,200 கோடி

₹675 கோடி மதிப்பில் 102 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மறுசீரமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, ஈரோடு, கோவையில் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, ₹400 கோடியில் புதிய திட்டம் உருவாக்கப்படும். கிராமச் சாலைகளை மேம்பாட்டுக்காக ₹2,200 கோடியும், சென்னையில் சீராக குடிநீர் விநியோகித்திட சுற்றுக்குழாய் திட்டத்திற்கு ₹2,423 கோடியும் ஒதுக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
Similar News
News March 14, 2025
RSS, பாஜகவை மன்னிக்க மாட்டேன்: காந்தி பேரன்

RSS, பாஜகவை மன்னிக்க மாட்டேன், சொன்ன கருத்துக்களையும் திரும்ப பெற மாட்டேன் என காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார். RSS- பாஜக உள்நாட்டு எதிரிகள், துரோகிகள், ஆபத்தானவர்கள் என துஷார் விமர்சித்து இருந்தார். மேலும், அவர்களை எதிர்ப்பது விடுதலை போராட்டத்தை விட முக்கியமானது என கூறியிருந்தார். இந்த கருத்துகளுக்காக துஷாரைக் கைது செய்ய பாஜக வலியுறுத்தியிருந்தது.
News March 14, 2025
540 கோடி VIEWS… ஹாட்ஸ்டாரில் சாம்பியன்ஸ் டிராபி சூப்பர் ஹிட்

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை உலகம் முழுவதும் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் மொத்தம் 540 கோடி பேர் பார்த்துள்ளனர். குறிப்பாக, பைனலில் இந்தியா, நியூசிலாந்து மோதிய போட்டியை 124.2 கோடி பேர் பார்த்துள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் போட்டியை 60.2 கோடி, இந்தியா, ஆஸி. போட்டியை 66.9 கோடி பேர் பார்த்துள்ளனர். இந்திய விளையாட்டுப் போட்டிகள் லைவில் இதுவொரு புதிய சாதனையாகக் கருதப்படுகிறது.
News March 14, 2025
மனைவியிடம் சில்மிஷம்: கணவன் தந்த தண்டனை

உ.பி.,யைச் சேர்ந்த சதீஷின் (45) மனைவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பெண் அருகில் இருந்த கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஊழியராக இருந்த தர்மேந்திர மாவி, அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். இதை அப்பெண் கணவனிடம் கூற, அவர் உறவினர்களுடன் சென்று மாவியின் ஆணுறுப்பை கத்தியால் வெட்டியுள்ளார். இது சரியான தண்டனை என்கின்றனர் நெட்டிசன்கள். நீங்க என்ன சொல்றீங்க?