News March 14, 2025

நெடுஞ்சாலைத்துறைக்கு ₹20,772 கோடி ஒதுக்கீடு!

image

நெடுஞ்சாலைத் துறைக்கு ₹20,772 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். கோவையில் 12.5 கிமீ நீளத்திற்கு புறவழிச்சாலை அமைக்க ₹348 கோடியும், நெல்லையில் 12.4 கிமீ நீளத்திற்கு அமைக்க ₹225 கோடியும் ஒதுக்கப்படுகிறது. அதே போல் நெடுஞ்சாலைகளை பசுமையாக்க வேம்பு, புளியமரக்கன்றுகள் நடப்படும் என்றும் பட்ஜெட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 15, 2025

CT வெற்றிக்கு மூவரே காரணம்: ரிக்கி பாண்டிங்

image

சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணம் 3 ஆல் ரவுண்டர்கள்தான் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஹர்திக், அக்‌ஷர், ஜடேஜா போன்ற திறன்மிக்க மூவர் அணியில் இருந்ததால்தான் இந்தியாவுக்கு இந்த வெற்றி சாத்தியமானது என்றும் அவர் கூறியுள்ளார். போதுமான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை என்ற குறை, வெளியில் தெரியவே இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News March 15, 2025

போர் நிறுத்தம்: PM மோடிக்கு நன்றி கூறிய புதின்

image

போர் நிறுத்தம் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின், இந்த உன்னத பணிக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். உக்ரைனுடனான மோதலை நிறுத்த தீவிர கவனம் செலுத்தியதற்காக டிரம்பிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். போரை முடிவுக்கு கொண்டு வர, புதினிடம் பிரதமர் மோடி பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 15, 2025

அதிகரிக்கும் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள்!

image

மகளிர் உரிமைத்தொகை விரிவாக்க அறிவிப்பு வெளியான நிலையில், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில், பெரும்பாலானோர் புதிதாக திருமணமானவர்கள், கடந்த முறை நில அளவு பிரச்னைகளால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ₹1,000 உரிமைத்தொகை பெற தகுதிகளை மறுவரையறை செய்து, அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடவுள்ளது. உங்கள் குடும்பத்தில் ₹1,000 வருகிறதா?

error: Content is protected !!