News March 15, 2025
₹2,000 போதும்.. மாதம் முழுவதும் ஏசி பஸ்களில் ப்ரீ

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 630 வழித்தடங்களில் 3,056 பஸ்களை MTC இயக்குகிறது. இதில் நாள்தோறும் 32 லட்சம் பேர் பயணிப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. தற்போது இந்த பஸ்களில் ₹1,000 பாஸ் இருந்தால், ஒரு மாதத்திற்கு பயணிக்கலாம். ஆனால் ஏசி பஸ்களில் செல்ல முடியாது. இதை கருத்தில் கொண்டு, ஏசி உள்ளிட்ட அனைத்து பஸ்களிலும் பயணிக்க ₹2,000 பாஸை விரைவில் MTC அறிமுகம் செய்யவுள்ளது.
Similar News
News March 15, 2025
வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி மேலும் குறைகிறது

ரெப்போ வட்டி விகிதத்தை அண்மையில் 0.25 புள்ளிகள் ரிசர்வ் வங்கி குறைத்தது. இதை பின்பற்றி, வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைத்தன. இந்நிலையில், பணவீக்கத்திற்கு ஏற்ப ஏப்ரல், ஜூன், அக்டோபரில் தலா 0.25 புள்ளிகள் என 0.75 புள்ளிகள் ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்கக்கூடும் என எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது. அப்படி குறைத்தால், வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி மேலும் குறையக்கூடும்.
News March 15, 2025
ENG எதிரான டெஸ்ட்: கேப்டனாக ரோஹித் தொடர்வாரா?

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரோஹித் ஷர்மா கேப்டனாக தொடர்வார் என தகவல் வெளியாகியுள்ளது. தொடர் தோல்வி காரணமாக AUS எதிரான BGT தொடரின் கடைசி டெஸ்டில் ரோகித் பங்கேற்காமல் வெளியேறினார். இதனால் டெஸ்ட் கேப்டனாக அவரது எதிர்காலம் குறித்த விவாதம் எழுந்தது. இதற்கிடையே, CT கோப்பையை IND கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித்தை நியமிக்க BCCI நிர்வாகிகள் விரும்புவதாக கூறப்படுகிறது.
News March 15, 2025
பச்சைத்துண்டு போட்டால் என்ன?

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனதை முன்னிட்டு திமுக MLAக்கள் அனைவரும் பச்சைத்துண்டு அணிந்து சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, துரை முருகன், பெரிய கருப்பன், நேரு ஆகிய முன்னணி அமைச்சர்கள் மட்டும் பச்சைத்துண்டு அணியவில்லை. இதனை சோசியல் மீடியாவில் பகிரும் எதிர்க்கட்சியினர் தாங்களும் பச்சைத்துண்டு போட்டால் என்ன என்று கேள்வி எழுப்புகின்றனர்.