News March 24, 2024
இரண்டாவது திருமணம் செய்தால் ₹2 லட்சம்

கைம்பெண் மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக புதிய திட்டத்தினை ஜார்கண்ட் மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. கணவர் இறந்தபின் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் அந்தப் பெண்ணுக்கு அரசு ₹2 லட்சம் வழங்கவுள்ளது. எதிர்பாராத விதமாக கணவர் இறந்துவிட்டால் பெண்கள் முடங்கிவிடாமல், மறுமணம் செய்து கொண்டு உறுதியோடு வாழ வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2025
இண்டிகோ விமானம் மீது மோதிய டெம்போ..

பெங்களூரு விமான நிலையத்தில் பார்க்கிங்கில் இருந்த இண்டிகோ விமானம் மீது டெம்போ வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. டெம்போ மட்டும் பலத்த சேதமடைந்தது. டெம்போ டிரைவர் தூங்கியபடி வாகனத்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. விபத்து தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
News April 20, 2025
கொசுவில் இது வேற ரகம்..

நீங்க பார்க்குறது கொசுவே தான். ஆனா, இது வேற ரகம். இலங்கையின் மிரிகாமா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய இனம். சாதாரண கொசு இல்ல, இதுக்கு பேரு க்யூலெக்ஸ் சின்ஸ்டெல்லஸாம். பார்க்க சின்னதா இருந்தாலும் ரொம்ப ஆபத்தாம். பெரும்பாலான வைரஸ்களை கடத்தும் அபாயம் கொண்டதா கண்டறியப்பட்டிருக்கு. இலங்கை பூச்சியியல் வல்லுநரான கயான் குமாரசிங்கே தான் இப்படி பீதிய கிளப்பியிருக்காரு! உங்க கருத்து என்ன?
News April 20, 2025
RR-க்கு சோலி முடிஞ்சு.. இனி வாய்ப்பில்லை ராஜாதானா?

RR அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வென்று 4 புள்ளிகளை பெற்றுள்ளது. PLAY OFF-க்கு செல்ல 16 புள்ளிகள் தேவை என்பதால், மீதமுள்ள 6 போட்டிகளிலும் அந்த அணி கட்டாயம் வெல்ல வேண்டும். 14 புள்ளிகளுடன் நெட் ரன்ரேட் அடிப்படையில் தகுதிபெற வேண்டும் என்றாலும், 5 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இருப்பினும், மற்ற அணிகளின் செயல்பாடுகளை பொறுத்தது என்பதால், 2-வது முறைக்கு வாய்ப்பு குறைவுதான்.